தலைமை செயலக முற்றுகை போராட்டம்.. மார்ச் 11ம் தேதி வரை நடத்த தடை.. சென்னை ஹைகோர்ட் உத்தரவு!
தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடத்த மார்ச்11 ம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: தலைமை செயலக முற்றுகை போராட்டம் நடத்த மார்ச் 11 ம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
என்ஆர்சி, என்பிஆர் சட்டங்களுக்கு ஆதரவு அளிக்க மாட்டோம் என தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும், சிஏஏ சட்டத்திற்கு எதிர்த்தும் தலைமை செயலகத்தை நாளை முற்றுகை போராட்டம் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட போவதாக இஸ்லாமிய அமைப்புகள் அறிவித்துள்ளது.

இந்த போராட்டங்களுக்கு தடை விதிக்க கோரி இந்திய மக்கள் மன்ற நிர்வாகி வராகி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு விசாரணைக்கு எடுத்து கொண்டது. அப்போது காவல்துறை தரப்பில்,முற்றுகை போராட்டம் நடத்த அனுமதி கோரி இஸ்லாமிய அமைப்புகள் அளித்த மனுவை காவல்துறை ஏற்கனவே அனுமதி வழங்காமல் நிராகரித்திருப்பதாகவும், அமைதியான போராட்டங்கள் நடத்த 13 இடங்கள் சென்னையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சட்டப்பேரவையை முற்றுகை என்பது சட்டவிரோதம் அதற்கு காவல்துறை அனுமதிக்காது என்றும் சிட்டி போலிஸ் சட்டத்தின் படி போராட்டங்கள் நடத்த சென்னை காவல் ஆணையர் தடை விதித்திருப்பதையும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதை பதிவு செய்த நீதிபதிகள், நாளை இஸ்லாமிய அமைப்புகள் நடத்த இருந்த தலைமை செயலக முற்றுகை போராட்டத்திற்கு அனுமதியில்லை எனக் கூறி தடை விதித்து உத்தரவிட்டனர். மேலும் வழக்கு தொடர்பாக தமிழக உள்துறை, காவல்துறை டிஜிபி, சென்னை மாநகர காவல் ஆணையர் ஆகியோர் மார்ச் 11 ம் தேதி பதிலளிக்க உத்தரவிட்டனர்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications