சனாதனமே அடையாளம்! அரசியல் காரணங்களுக்காக மதசார்பற்ற நாடாக இந்தியா மாறியது: ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
சென்னை: இந்தியா அரசியல் காரணங்களால்தான் மதசார்பற்ற நாடானது என்றும், சனாதனமே நம்முடைய அடையாளம் எனவும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து இருக்கிறார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சமீப காலமாக தெரிவித்து வரும் கருத்துக்கள் தொடர்ந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன.
திராவிடம் குறித்து அவர் பேசியது, சனாதனத்துக்கு ஆதரவாக உரையாற்றியது, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்புக்கு எதிராக கருத்து தெரிவித்தது என தொடர்ந்து அவரது உரைகள் சர்ச்சைகளில் சிக்கி வருகின்றன.

ஆளுநர் ஆர்.என்.ரவி உரை
இந்த நிலையில் சென்னை பட்டயக் கணக்காளர் அமைப்பினுடைய 90 வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "பன்முகத்தன்மை கொண்ட நிலப்பரப்பாக இந்தியாவை ஆங்கிலேயர்கள் பதிவு செய்ததை ஏற்க முடியாது. அறத்தை மையமாக கொண்டது சனாதனம்.

மதசார்பின்மை
ஆனால், சனாதனத்துக்கு எதிரான மதசார்பற்ற என்ற வார்த்தையை ஆங்கிலேயர்கள் அதற்கு தவறான விளக்கம் கொடுத்து அரசியலமைப்பில் சேர்த்துவிட்டனர். அரசியல் காரணங்களால் மட்டுமே அரசியலமைப்பின் சட்டப்பிரிவு எண் 42 திருத்தம் செய்யப்பட்டு அதில், மதசார்பற்ற என்ற வார்த்தை சேர்க்கப்பட்டது.

சனாதனம்
நமது அடையாளமே சனாதனம் தான். சனாதனத்தின் அடிப்படையில் யாரும் முன்னவர்களும் இல்லை, பின்னவர்கள் யாரும் இல்லை. சனாதனம் என்றால் அனைத்து மதங்களும் சமம் என்றே அரத்தம்." என்றார். இந்தியாவில் பிரிவினைகளை ஏற்படுத்தியவர்கள் ஆங்கிலேயர்கள்தான் என்று மறைமுகமாக ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சித்தார். கடந்த 1951 ஆம் ஆண்டு பிறகே இந்தியாவில் அதிக சாதிகள் உருவாகின." என்றார்.

டெல்லி செல்லும் ரவி
ஆளுநரின் இந்த கருத்துக்களும் தற்போது விவாதப் பொருளாகி இருக்கின்றன. தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது. குறிப்பாக ஆளும் திமுகவின் அடிப்படை கொள்கையான திராவிடத்தின் மீதே சமீபத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனங்களை முன்வைத்தது பெரும் விவாதப் பொருளானது. இதற்கிடையே இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்ல இருக்கிறார்.
-
தமிழக சட்டசபையில் உங்கள் குரல் ஒலிக்குமா? நிருபர் கேட்ட கேள்வி! வைகோ சொன்ன ஸ்டன்னிங் பதில்! -
ஷாக்..ஏப்-1ல் வாகன ஓட்டிகளுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! டோல் கட்டணத்தை உயர்த்தும் NHAI! எங்கெங்கே? -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications