சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் நிர்வாகிகளின் ட்விட்டர்கள் முடக்கம்.. விசிக எதிர்ப்பு.. விக்ரமன் காட்டம்
சென்னை: நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்பட அக்கட்சியின் 20க்கும் அதிகமான நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் ஒரே நேரத்தில் மொத்தமாக முடக்கம் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் தான் ட்விட்டர் பக்க முடக்க செயலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமான் உள்ளார். இவர் திராவிட கட்சிகள் மற்றும் தேசிய கட்சிகளுடன் கூட்டணி சேராமல் தனித்து தேர்தலில் போட்டியிட்டு வருகிறார். சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் அவர் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்தே வேட்பாளர்களை களமிறக்கினார்.

மேலும் மாநிலம் முழுவதும் பொதுக்கூட்டம், போராட்டம், ஆர்ப்பாட்டங்களை அவர் எடுத்து வருகிறார். அதோடு தமிழ் தேசியம் குறித்தும், மாநிலத்தில் நடக்கும் ஊழல், முறைகேடு பற்றியும் அவர் எடுத்துரைத்து வருகிறார். இந்நிலையில் தான் இன்று திடீரென்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் அதிரடியாக முடக்கம் செய்யப்பட்டன.
சீமானின் @SeemanOfficial என்ற அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கம் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில், ‛‛சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் நாம் தமிழர் கட்சியின் பிற நிர்வாகிகளான இடும்பாவனம் கார்த்தி, பாக்கியராஜன், விக்கி பார்கவ், உள்பட 20க்கும் அதிக நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்களும் முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவில்லை.
இதற்கு நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் துரை முருகன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‛‛சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களின் ட்விட்டர் கணக்குகள் முடக்கப்பட்டு இருக்கிறது கருத்து சுதந்திரம் பேசும் கண்ணியவான்களே நாங்கள் சமூக வலைதளங்களில் பேசுவதை கூட உங்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லையா?'' என கேள்வி எழுப்பி உள்ளார்.
இந்நிலையில் தான் சீமான் உள்பட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகளின் ட்விட்டர் பக்கங்கள் இந்தியாவில் முடக்கப்பட்டு இருப்பதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளரான விக்ரமன் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

‛‛நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அண்ணன் சீமான் உள்ளிட்ட கட்சியின் முக்கிற பொறுப்பாளர்களின் ட்விட்டர் கணக்குகம் முடக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நமக்கென இருக்கும் மக்கள் ஊடகங்களிலும் கருத்துரிமையை பறிப்பது ஜனநாயக விரோத செயல். கடும் கண்டனங்கள்'' என விக்ரமன் தெரிவித்துள்ளார்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
விசிகவின் ராஜ்ய சபா சீட் கோரிக்கை.. ஸ்டாலின் சொன்னது என்ன? திருமாவளவன் கொடுத்த விளக்கம் -
6 + 2.. திமுக கூட்டணியில் விசிகவிற்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு.. திருமா மனதை கரைத்த ஸ்டாலின் -
66/234! விசிக கேட்ட 10+1 தேமுதிகவுக்கு! திமுக கூட்டணியில் யாருக்கு எத்தனை சீட்! DMK-க்கு 166-ஆ? -
தலித்துகள் என்றால் ஏளனமா? திமுக - விசிக கூட்டணி அவசியமா? தமிழன் பிரசன்னாவை நோக்கி இளைஞர்கள் கேள்வி! -
கள்ளக்குறிச்சியை கையில் எடுத்த திருமாவளவன்! விசிகவின் 15 Stronghold உத்தேச பட்டியல்! -
புதுச்சேரி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. ஒரு தொகுதி விசிகவுக்கு ஒதுக்கீடு! யார் யாருக்கு சீட்? -
VCK: இரட்டை இலக்கம் + 2028ல் ஒரு மாநிலங்களவை! விசிக தீர்மானம்! என்ன செய்ய போகிறார் திருமாவளவன்? -
கலைஞர் மகள் கனிமொழிக்கே சீட் இல்லை.. உதயநிதிக்கும் சிக்கல் வரும்னு பயம்! விளாசிய நாம் தமிழர் சீமான்! -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்?












Click it and Unblock the Notifications