ஆடியோ அரசியல்- நிறுத்துங்க என பல முறை சசிகலாவிடம் சொன்னேன்.. நாகரிகம் இல்லாமல் தொடருகிறது- சீமான்
சென்னை: ஆடியோ அரசியல் நாகரீகமானது அல்ல; அதனை நிறுத்துங்கள் என சசிகலாவிடம் எத்தனையோ முறை சொன்னேன்.. ஆனால் நாகரீகம் இல்லாமல் ஆடியோக்கள் வெளியிடப்படுவது தொடர்கிறது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு சீமான் அளித்த பேட்டியில் இது தொடர்பாக கூறியிருப்பதாவது: சசிகலா பேசும் ஆடியோக்கள் வெளியிடப்படுவதை ரசிக்கவும் இல்லை- ஏற்கவும் இல்லை. இது சரியான முறையும் அல்ல.

தலைமை பண்பு அல்ல
ஒருவரை தலைவர் என மதித்து பேசுகிறார்கள். அதனை பதிவு செய்து பொதுவெளியில், ஊடகத்தில் வெளியிடுவது என்பது தலைமை பண்புக்கானது அல்ல. அவமானகரமானதுதான்.

நேரடியாக பேசுங்க..
தொண்டர்களை அழைத்து நேரடியாக உரையாடுங்கள்.. பொது இடங்களில் ஒன்று கூட்டி பேசுங்கள்.. அதுதான் சரியான முறையாக இருக்க முடியும். இது தொடர்பாக நான் பலமுறை சசிகலாவிடம் இதுபற்றி பேசினேன்.

சசிகலாவிடம் ஆடியோ வேண்டாம் என்றேன்
ஆடியோக்கள் வெளியிடுவதை நிறுத்துங்கள் .. சரியானது அல்ல என சசிகலாவிடம் சொல்லிப்பார்த்தேன். ஆனால் இது தொடரத்தான் செய்கிறது.
Recommended Video

முறையான செயல் அல்ல
நான் பேசுவதைக் கூட உளவுத்துறை பதிவு செய்யும். ஆனால் பகிரங்கமாக வெளியிடாது. அப்படி பொதுவெளியில் வெளியிடுவது முறையான செயலும் அல்ல. இவ்வாறு சீமான் கூறினார்.












Click it and Unblock the Notifications