“படிக்கிற கூட்டம் ஒரு பக்கம்.. கையை கடிக்கிற கூட்டம் மறுபக்கம்!” தவெகவை விளாசிய சீமான்
சென்னை: சமீபத்தில் தவெக கட்சியை சேர்ந்த ஒருவர், காவல்துறை அதிகாரியின் கையை கடித்திருந்தது பேசுபொருளாகியிருந்தது. இந்நிலையில் இது குறித்து விமர்சித்துள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "படிக்கிற கூட்டம் ஒருபக்கம்.. கையை கடிக்கிற கூட்டம் மறுபக்கம் கூடுது" என்று கூறியிருக்கிறார்.
இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, "படிக்கிற கூட்டமெல்லாம் ஒரு பக்கமும், கையை கடிக்கிற கூட்டம் இன்னொரு பக்கமும் கூடுது. இதை சொன்னால் கோவித்துக்கொள்கிறார்கள். நாங்கள் அணில்கள்தானே! பழங்களை கடித்தோம், காயை கடித்தோம் அப்போதெல்லாம் அமைதியாக இருந்துவிட்டு, கையை கடித்தவுடன் கோவித்துக்கொள்கிறீர்களே என கேட்கிறார்கள்.

எல்லாவற்றையும் திரை போட்டு மூடி பழக்கப்பட்டவர்கள், இப்போது நம்முடைய எழுச்சியை திரையை போட்டு மூடலாம் என்று நினைக்கிறார்கள். இது திரையை போட்டு மூடக்கூடிய குப்பை அல்ல. கனன்றுக்கொண்டிருக்கும் பெரு நெருப்பு புரட்சி தீ என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
எல்லாமே பெரியார் என்பவர்கள், எங்களுக்கு ஓட்டு போட வேண்டாம். நாங்கள் திராவிடர்கள் என்பவர்கள், எவரும் எனக்கு ஓட்டு போட வேண்டாம். தமிழர்கள் எனக்கு ஓட்டு போட்டால் போதும். இந்த கட்சி வெற்றி பெற்று, தமிழகத்தின் பிரச்சினைகளுக்கு முடிவுரை எழுதும். மக்களாட்சியை ஏற்றுக் கொண்டிருக்கிற மண்ணில், ஆட்சி அதிகாரம்தான் எல்லா மாற்றத்திற்கும் அடிப்படையாக இருக்கும். இங்கே, நம்முடைய மொழியை பேசி, நம் வாழ்க்கையை வாழ்ந்து, நம்மால் ஆட்சிக்கு வந்து, நம் மொழியை, வரலாற்றை, இனத்தை அழிக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். தமிழினத்தில் அவ்வப்போது எழும் எழுச்சியை, திராவிடர்கள் தன் ஆட்சி அதிகாரத்தால் அடக்கி விட்டார்கள்.
வறுமை பரவலாக இருக்கிறது. இதை பயன்படுத்தி, அவர்கள் ஆட்சிக்கு வருகிறார்கள். தேர்தலில் இந்த கட்சிகள் பெறுவது எல்லாம் வெற்றியா? நான் இந்த மக்களை முழுமையாக நம்பி களத்தில் நிற்கிறேன்! எனவே, வெற்றியோ, தோல்வியோ.. அது அவர்கள் தரம் பரிசு. எங்களை போல, தனித்து நின்று தத்துவம் பேசி வெற்றி பெற்று காட்டுங்கள் பார்ப்போம். பெரிய கட்சி என்கிறார்கள், ஆனால் மாநாட்டுக்கு காசு கொடுத்துதான் ஆட்களை கூட்டி வருகிறார்கள்.
இப்படி இருப்பவர்கள், நாங்கள் வெற்றி பெற்று விடுவோம் என்று பயப்படுகிறார்கள். எல்லாமே பெரியார்தான் காரணம் என்கிறது ஒரு கூட்டம். உண்மையில் இந்த நாட்டை திருடர்கள் நாடாக மாற்றியதற்கும், எங்கள் மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வழிபாடு, நிலம், வளம், ஆட்சி அதிகாரம் ஆகியவற்றை அழித்து சிதைத்ததற்கு காரணம் பெரியார்தான். அந்த திராவிட திருட்டு சித்தாந்தத்துக்கும், தமிழ் தேசிய கருத்துகளுக்கும் இடையே தான் இங்கே போட்டியே" என்று கூறியுள்ளார்.
-
ஷாக்! விஜய் வேட்புமனுவிலேயே செய்த பெரிய பிழை! திருச்சி கிழக்கு, பெரம்பூரில் நிராகரிக்கப்பட வாய்ப்பு? -
விஜய் பற்றி.. டெல்லிக்கு பறந்த உளவுத்துறை ரிப்போர்ட்.. ஆட்டத்தை கலைத்து ஆடப்போகும் அமித் ஷா? -
10 சீட்டுகளை வெல்லும் தவெக.. 23.9 சதவிகித வாக்குகளை கைப்பற்றும் விஜய்.. லோக்போல் கருத்துக்கணிப்பு -
விஜய்க்கு பாதுகாப்பு கொடுங்க.. மத்திய அரசுக்கு பதில் மணிப்பூர் ஆளுநருக்கு கடிதம் எழுதிய தவெக! -
Jana Nayagan: ஜனநாயகன் பட சிக்கல் தீர்ந்தது? விரைவில் படம் ரிலீஸ் ஆகப்போகுதா? கொண்டாட தயாராகும் விஜய் ரசிகர்கள்! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
தவெக வேட்பாளருக்கு எதிராக கொந்தளித்த மகளிரணி! கட்சியிலிருந்தே நீக்குங்க.. வெடிக்கும் பஞ்சாயத்து! -
தேர்தலுக்கு பின்.. விஜயுடன் கூட்டணி.. பாஜக போடும் மாஸ்டர் பிளான்.. முக்கோண பிரம்மாஸ்திரம்! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
திமுக, அதிமுக, தவெக தேர்தல் வாக்குறுதிகள்.. தமிழ்நாட்டின் வருமானம் என்ன.. நிறைவேற்ற முடியுமா?












Click it and Unblock the Notifications