மூக்குத்தியில் பிட் வப்பாங்கன்னு சொன்னியே.. ஓட்டு மெஷின் தப்பு செய்யாதுன்னு நாங்க நம்பனும்.. சீமான்
நாட்டின் தேர்தல்முறை மாற்றி அமைக்கப்பட வேண்டும் என சீமான் வலியுறுத்துகிறார்.
Recommended Video
சென்னை: "நாங்க போட்டியிடறதையே ஜனங்களுக்கு காட்டிட கூடாதாம்.. எங்க பேச்சை ஏன் டிவியில மறைக்கிற... டேய்.. தொடை நடுங்குது இல்லை.. சரியான ஜனநாயகவாதியா இருந்தால், நாங்களும் போட்டியிடறோம்னு சொல்லு" என்று சீமான் ஆவேசமாக கூறியுள்ளார்.
அனைத்து கட்சிகளின் பிரச்சாரங்கள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன் வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்து வருகிறார்.
தன் கட்சி சின்னம் வாக்கு எந்திரத்தில் மறைக்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய சீமான், தேர்தல் முறையையே மாற்றுமாறு வலியுறுத்துகிறார். இதை பற்றி பிரச்சார கூட்டத்தில் அவர் பேசும்போது:
அடடே.. களத்தில் குதித்த அடுத்த வாரிசு.. தமிழச்சிக்கு ஆதரவாக வீடு வீடாக மகள் பிரச்சாரம்!
துப்பு இருக்கா?
எதுக்கு எல்லாரும் வீடு வீடுக்கும் போய் ஓட்டு கேக்கறாங்க. இப்ப நான் ஒரு மேடை போட்டு பேசிட்டு இருக்க மாதிரி அவங்களையும் பேச சொல்லு. நான் இப்போ பேசிட்டு போறேன்.. அப்பறம் ஸ்டாலினை வந்து பேச சொல்லு.. அப்பறம் எடப்பாடியை வந்து பேச சொல்லு.. ராகுலை வந்து பேச சொல்லு.. யார் பேசறது நல்லா இருக்கோ என் மக்கள் தீர்மானித்து ஓட்டு போடட்டும். வாக்கு எந்திரத்தை கண்டுபிடிச்சவனே அதை இன்னைக்கு விட்டுட்டான். ஆனா இவங்க இதை பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்காங்க. அதுலயும் ஏமாத்துறாங்க.
வாக்கு எந்திரம்
எதுக்கு எல்லாரும் வீடு வீடுக்கும் போய் ஓட்டு கேக்கறாங்க. இப்ப நான் ஒரு மேடை போட்டு பேசிட்டு இருக்க மாதிரி அவங்களையும் பேச சொல்லு. நான் இப்போ பேசிட்டு போறேன்.. அப்பறம் ஸ்டாலினை வந்து பேச சொல்லு.. அப்பறம் எடப்பாடியை வந்து பேச சொல்லு.. ராகுலை வந்து பேச சொல்லு.. யார் பேசறது நல்லா இருக்கோ என் மக்கள் தீர்மானித்து ஓட்டு போடட்டும். வாக்கு எந்திரத்தை கண்டுபிடிச்சவனே அதை இன்னைக்கு விட்டுட்டான். ஆனா இவங்க இதை பிடிச்சிட்டு தொங்கிட்டு இருக்காங்க. அதுலயும் ஏமாத்துறாங்க.
மூக்குத்தி
என் பிள்ளைங்க அன்னைக்கு நீட் தேர்வு எழுதும்போது மூக்குத்தியை கழட்டினே.. காதுல மாட்டியிருந்த தோடு கழட்டினே? துப்பட்டாவை எடுத்தே? மூக்குத்திக்கு உள்ளே பிட் அடிச்சு என் பிள்ளைங்க எழுதிடுவாங்கன்னு நம்புற நீ... இந்த வாக்கு எந்திரத்துல ஏமாத்துவாங்கன்னு சொன்னா நம்ப மாட்டேன்றே?
பதில் இல்லை
ஒரேநாள்ல ஜிஎஸ்டி கொண்டு வந்துட முடியும்னு சொல்றீங்க? ஒரே நாள்ல பணம் செல்லாதுன்னு சொல்றீங்க.. ஒரே நாளில் தேர்தல் முறையை மாற்ற முடியாதா? முதல்ல இவங்களுக்கு நான் கேக்கிற கேள்விக்கு பதில் இல்லை. அதனால எந்த தொலைக்காட்சியிலும் நம்மள காட்டறது இல்லை.
ஜனநாயகமா?
po
"ஐயையோ இவன் பேச்சை வெளியே விட்டுடுடாதே.. பத்திரிகையில போட்டுறாதே.."ன்னு சொல்றான். மக்கள் நீதி மய்யத்தோடு நிறுத்திக்கறான் செய்திகளை. ஏன்னா நாங்க போட்டியிடறதையே ஜனங்களுக்கு காட்டிட கூடாதாம். டேய்.. தொடை நடுங்குது இல்லை.. சரியான ஜனநாயகவாதியா இருந்தால், நாங்களும் போட்டியிடறோம்னு சொல்லு.
எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின் பேசறார்.. அவருக்கு கூட்டம் சேருமா? முதல்வர் எடப்பாடி பிரச்சாரத்துல பேசறார்.. அவருக்கு அவங்க வீட்டில இருந்தே முதல்ல யாராவது பேச்சை கேட்க வருவாங்களா?" என்றார்.