பெரியாருக்கு சர்டிபிகேட் கொடுக்க வேண்டாம்.. பைத்தியக்காரன் கொடுத்தால் சர்டிபிகேட் செல்லாது - கி.வீரமணி
சென்னை: பெரியாருக்கு யாரும் சர்டிபிகேட் கொடுக்க வேண்டாம்; பைத்தியக்காரன் கொடுத்தால் சர்டிபிகேட் செல்லாது.. வெறிபிடித்த நாய்களுக்கு வைத்தியங்கள் தான் தேவை.. அவர்களுக்கு பதில் தேவையில்லை.. என்று திராவிடர் கழக தலைவர் வீரமணி சென்னை எழும்பூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பேசினார். மேலும் பெரியார் குறித்தும், நீதிபதிகள் நியமனம் குறித்தும் வீரமணி பேசினார்.
உயர்நீதிமன்றங்கள் - 'உயர்ஜாதி நீதிமன்றங்களா'?'' என்று மக்களும் சமூகநீதி ஆர்வலர்களும் கேட்கும் நிலையைத் தவிர்க்கவேண்டும் என்பதை விளக்கவும், உயர்நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்க்கவும் சமூகநீதி ஆர்ப்பாட்ம் ஜனவரி 9ம் தேதியான நேற்று சென்னையிலும், மதுரையிலும் சமூகநீதியாளர்களை ஒருங்கிணைத்து அறவழியில் கவன ஈர்ப்பாக நடத்த உள்ளதாக திராவிடர் கழக தலைவர் வீரமணி ஏற்கனவே அறிவித்திருந்தது. தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக போராட்டம் நடைபெறவில்லை என்றும் உரிய சமூகநீதி கிடைக்கவே கோரிக்கைப் போராட்டமாக இந்த சட்ட உரிமைப் போராட்டம் நடைபெறும் என்றும் கூறியிருந்தார்.'

கி வீரமணி அறிவித்தபடி சென்னையில் நேற்று போராட்டம் நடந்தது. அதில் வீரமணி பேசும் போது, நீதிபதிகள் நியமனம் குறித்து விரிவாக பேசினார். அதேபோல் பெரியார் குறித்தும் வழக்கறிஞர்கள் குறித்து பேசினார். அப்படியே சீமானின் பேச்சுக்கும் பதிலடி கொடுத்தார். அப்போது வீரமணி பேசுகையில், "பெரியார் பகுத்தறிவுவாதியா என்று இப்போது சில பைத்தியக்காரர்கள் ஆச்சர்யப்படுகிறார்கள். பெரியார் யார் என்பதை அறிய உனக்கு முதலில் பகுத்தறிவு இருக்க வேண்டும்..
பைத்தியம் பிடிச்சவன் பகுத்தறிவு பற்றி பேசக்கூடாது.. பைத்தியம் பிடிச்சவனுக்கு பதில் சொல்ல வேண்டிய கடமை எங்களை மாதிரி உள்ளவர்களுக்கு கிடையாது. பைத்தியம் பிடித்தவனுக்கு செய்ய வேண்டியது வைத்தியமே. வெறிநாய் கடித்தால், சிகிச்சை தான் கொடுக்க வேண்டும்.. வெறிநாயுடன் போட்டி போட முடியுமா? அதைவிட முக்கியம் நீதிபதி துறை... திருடப்பார்க்கிறார்கள். வேறு ஆள் வந்து உட்கார பார்க்கிறார்கள்.. இந்த கவனத்தை திருப்பிவிட நீ என்னென்னமோ முயற்சி செய்கிறாய்.. அதை திருப்பிவிட அந்த பக்கம் பேசிக்கொண்டு போகிறாய்... எங்களை திசை திருப்ப முடியாது. நாங்கள் பெரியாரிடம் படித்தவர்கள்.. பெரியார் தந்த புத்தி எங்கள் புத்தி..
பெரியாரிடம் போய் ஒருவர் பொதுஉடைமை, பொதுஉடைமை என்று சொல்கிறீர்களே.. உங்கள் மனைவி நாகம்மையை அனுப்புவீர்களா என்று கேட்டார். அதற்கு பெரியார் அதை நாகம்மையிடம் போய் கேள் என்று பதில் அளித்தார். இன்றைக்கு பெரியார் குறித்து ஒருவர் பேசுகிறார்'. அவர் சர்டிபிகேட் யாருகேட்டா... அந்த சர்ப்டிபிகேட் வாங்கினால் செல்லுமா... செல்லாது.. அவன் தன்னை இருக்கிறோம் என்று காட்ட வருகிறான்..
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக்












Click it and Unblock the Notifications