“மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு இல்லாத அதிகாரம்.. ஆளுநருக்கு எப்படி இருக்கும்?” - சீமான்
சென்னை: "பல கோடி மக்கள் வாக்களித்து முதலமைச்சரை தேர்வு செய்திருக்கிறார்கள். இத்தனை கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சருக்கு இல்லாத அதிகாரம், ஆளுநருக்கு இருப்பது எப்படி?" என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, "ஆளுநர் யாருன்னு உங்களுக்கு தெரியும். அவர் பிஜேபி, ஆர்எஸ்எஸ் உறுப்பினர். எப்பவுமே ஒன்றியத்தை ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகள், எந்த மாநிலத்தில் அதற்கு அதிகாரத்தில் இல்லையோ அங்க அவங்க ஆட்களை போட்டு, எந்த ஒரு நலத்திட்டத்தையும் நிறைவேற்ற விடாமல் மக்களால் தடுப்பார்கள்.

தேர்வு செய்யப்பட்ட அரசுக்கு இல்லாத அதிகாரம், ஒரு நியமிக்கப்பட்ட ஒற்றை நபருக்கு இருக்கிறது. எல்லாரும் சேர்ந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினால், அவர் கையெழுத்து போட்டா தான் செல்லும் என்றால் இது மக்களாட்சி ஜனநாயகம்னு எப்படி நம்புறது? இத்தனை கோடி மக்களால் தேர்வு செய்யப்பட்ட முதல்வருக்கு இல்லாத அதிகாரம், ஒரு நியமன உறுப்பினருக்கு எப்படி வருது? இது எப்படி மக்களாட்சி என்று ஏற்பது? புதுச்சேரியில் ஒரு நலத்திட்டத்தையும் நிறைவேற்ற விடவில்லை கிரண்பேடி. தன்னிச்சையாகவே இவர்களாக ஆய்வு செய்ய கிளம்பிவிடுவது, இவர்களாக எல்லாவற்றையும் செய்வது, இதெல்லாம் கொடுமை" என்று விமர்சித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆந்திர காட்டுக்குள்ள 20 தமிழர்களை இதே சந்திரபாபு நாயுடு தலைமையிலான போலீஸ்தான் சுட்டு கொன்றது. நாங்க வறுமையின் காரணமா அந்த செம்மர கட்டையை வெட்ட வந்தோம்ங்கறதுதான் இதற்கான காரணம். நாங்க வெட்டும்போது சான்றுகளோடு பிடிக்கல. நாங்கள் எந்த பன்னாட்டு கார்ப்பரேட்டின் கைக்கூலிகள் கிடையாது. பக்கத்து மாநிலத்தில் இருக்கிற சாதாரண மக்கள். மனச்சான்றோடு எல்லாரும் பாருங்க. எங்களை கைது பண்ணி சிறை பண்ணலாம். நாங்க வழக்காடி உயிரோட வெளியில வரலாம். ஆனா எதுக்காக சுட்டு உடைய எல்லாம் கழற்றிவிட்டு, விறகு கட்டையில ஒரு எண்ணு, எங்க கால்லயும் ஒரு எண்ணை போட்டு வைக்கனும்? மரக்கட்டையும் தமிழன் உயிரும் ஒன்னுன்னா?
மரக்கட்டையும் மனித உயிரும் ஒண்ணான்னு இந்த நாட்டுல யாராவது ஒருவர் கேட்டிருக்கிறாரா? உயிர்களை பலி கொடுத்த குடும்பத்துக்கு இந்த நாடு கொடுத்த காசு எவ்வளவு? பசிக்காத தானே பிழைக்கப் போனேன். வெட்ட வந்த கூலி என் மாநிலத்தில் இருந்தான் வந்தவன். வெட்டி ஏத்துன முதலாளி எங்கடா இருந்தான்னு கேட்டிருக்கணுமா இல்லையா? அவன் மேல ஏன் நீ வழக்கு போடல? அவனை ஏன் கைது செய்யல?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
-
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
இன்னொரு ரவுண்டு மழை.. இந்த மாவட்டங்களுக்கு ஜில் அப்டேட்! குட் நியூஸ் சொன்ன வானிலை மையம் -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
வேட்புமனு தாக்கல் செய்ய.. 4 நாட்கள்தான்! அதிரடியாக அறிவித்த தேர்தல் ஆணையம்! -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம் -
மழையெல்லாம் ஓவர்.. இனி வறண்ட வானிலைதான்! உஷாரா இருங்க மக்களே! வெதர் அப்டேட்! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications