ஒரு முடிவோடு சீமான்.. மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்.. காவிரிக்காக வீடியோ வெளியிட்டு அழைப்பு
சென்னை: கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என சீமான் வேண்டுகோள் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாடு - கர்நாடகா இடையே நதிநீர் பங்கீடு பிரச்சனை மிக தீவிரமாக இருந்து வருகிறது. காவிரி விவகாரம் இரண்டு மாநிலங்களிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து உரிய வழங்க வேண்டும் என்று தமிழக அரசு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி வருகிறது. தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கூடாது என கர்நாடகாவில் போராட்டம் நடந்து வருகிறது.

அதேபோல், தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து தமிழகத்திலும் விவசாயிகள், அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்திற்கு தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் நாளை ( ஞாயிற்றுக் கிழமை) சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானம் அருகே மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், கண்டன ஆர்ப்பாட்டத்தை முன்னிட்டு மக்களுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், "என்னுடைய உயிரோடு கலந்து வாழுகின்ற தாய்த்தமிழ் உறவுகள் அனைவருக்கும் என் அன்பு வணக்கம்! காவிரி நதிநீர் நம் உரிமை! அதைத் தர மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்தும், பெற்றுத் தர மறுக்கும் இந்திய ஒன்றிய அரசைக் கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டரங்கம் அருகில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. மானத் தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! உரிமையை மீட்க, உணர்வோடு கூடுவோம்! நாம் தமிழர்!" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications