கணிப்புகளை விடுங்க... சிந்திய ரத்தத்துக்கு ஒட்டு வராமலா போய்விடும்.. சீமான் தம்பிகள் நம்பிக்கை!
சென்னை: ஊடகங்களில் வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகளை ஏற்க மறுத்துள்ள சீமானின் நாம் தமிழர் கட்சியினர் சிந்திய ரத்தத்துக்கு ஓட்டு வராமலா போய்விடும் என நம்பிக்கையுடன் உள்ளனர்.
தமிழகத்தில் மக்களவை தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு அணியும், திமுக தலைமையில் ஒரு அணியும், அமமுக தலைமையில் ஒரு அணியும், கமலின் மக்கள் நீதி மய்யம் தனியாகவும், சீமான் நாம் தமிழர் கட்சி தனியாகவும் போட்டியிட்டன.
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருந்தது. இதன் மூலம் விவாசாய பெருங்குடி மக்களின் நம்பிக்கை பெற்றுவிடலாம் என எண்ணி நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் விவசாயிகளை கவரும் வகையிலான பிரச்சாரங்களை முன்னெடுத்தார்.

33 சதவீத ஒதுக்கீடு
மக்களவை தேர்தலில் மிக சமானிய மக்களை வேட்பாளர்களாக நிறுத்திய சீமான், பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீட்டையும் தேர்தலில் அறிமுகம் செய்தார். இதன்படி தமிழகத்தில் பல தொகுதிகளில் நாம் தமிழர் சார்பில் பெண்கள் தான் போட்டியிட்டனர்.

வித்தியாசமான பிரச்சாரம்
இதனிடையே சீமான் கட்சியினரின் வளர்ச்சியை முன்னிறுத்தி மேற்கொண்ட் பிரச்சாரங்கள் தமிழகம் முழுவதுமே மிக வித்தியாசமாக இருந்தது. சீமான் 40 தொகுதிகளிலும் தீவிர பிரச்சாரம் செய்தார். இதனால் எப்படியும் நல்லதொரு முடிவு இந்த தேர்தலில் கிடைக்கும் என் நாம் தமிழர் கட்சியினர் நம்பிக்கையில் உள்ளனர்.

ஏற்க முடியாது
இந்நிலையில் இன்று மாலை வெளியான கருத்துக்கணிப்பு முடிவுகள் நாம் தமிழர் கட்சியினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. நாம் தமிழர் கட்சிககு ஒரு இடம் கூட கிடைக்காது என எல்லா ஊடகங்களும் அறிவித்துள்ள நிலையில், கருத்துக்கணிப்பு எல்லாம் தூற எறியுங்கள் என நாம் தமிழர் கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். சிந்திய ரத்தத்துக்கும் , உழைப்புக்கும் ஓட்டுக்கள் நிச்சயம் விழும் என சீமானின் நாம் தமிழர் தம்பிகள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள்.

நம் தமிழர் நம்பிக்கை
இந்நிலையில் மே23ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும் நாளினை நாம் தமிழர் கட்சியினர் நம்பிக்கையுடன் எதிர்பார்த்து வருகிறார்கள். வெற்றி பெறமுடியாவிட்டாலும் பெரிய அளவில் இந்த முறை வாக்கு வங்கி உயரும் என நாம் தமிழர் கட்சியினர் நம்பிக்கையுடன் உள்ளார்கள்.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications