Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கப்சா அடிச்சு விட வேண்டியது.. மேடையில் முதல்வர் ஸ்டாலின் போலவே ‘மிமிக்ரி’ செய்த சீமான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: திராவிடம் பற்றி முதல்வர் ஸ்டாலின் பேசியதை அவரைப் போலவே 'மிமிக்ரி' செய்து ஆர்ப்பாட்டத்தில் பேசினார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

காவிரியில் தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட நடவடிக்கை எடுக்காத மத்திய மாநில அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சீமான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி நீரை பெற்றுத்தராத திமுக அரசையும், வழங்க மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசைக் கண்டித்தும், காவிரி நீரை பங்கிட்டுத் தர எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாத மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Seeman speaks in CM Stalin modulation in NTK protest today

ஆர்ப்பாட்டத்தின் போது பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், "காவிரி விவகாரத்தில் கர்நாடகாவில் காங்கிரஸும், பாஜகவும் மாநில கட்சிகளாக செயல்படுகின்றன. காவிரி விவகாரத்தில் கர்நாடக மக்களுக்கு உண்மையாக இருக்க அம்மாநில ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்களின் வாக்குகளைப் பெற்று முதலமைச்சரான ஸ்டாலின் அப்படி எந்த முயற்சியையும் எடுக்கவில்லை" என விமர்சித்தார்.

மேலும் பேசிய சீமான், "இந்திரா காந்தி காலத்தில் காவிரியில் இருந்து 340 டி.எம்.சி தண்ணீர் பெற்றுக்கொண்டிருந்த நாம், 40 டி.எம்.சி தண்ணீரைப் பெற போராடிக் கொண்டிருக்கிறோம். இங்கே இருக்கும் காங்கிரஸ், பாஜக வாயைத் திறக்காது. ஏனெனில் நாம் மானம் கெட்டுப்போய் திரிகிறோம். கச்சத்தீவை மீட்டால் என்ன? காவிரியில் தண்ணீர் வந்தால் என்ன? மீத்தேன் ஈத்தேன் எடுத்தால் என்ன? நாம் ஓட்டைப் போட்டு விடுவோம் என்ற நம்பிக்கை.

Seeman speaks in CM Stalin modulation in NTK protest today

நமக்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கர்நாடகாவில் ஆள்கிறது. அந்த காங்கிரஸ் கட்சியோடு நாம் கூட்டணி வைத்துக்கொண்டு போனால் இந்த தேர்தலில் தமிழர்கள் நம்மை தோற்கடித்து விடுவார்கள் என்ற பயம் இருந்தால் இந்த காங்கிரஸ் கட்சியை கழற்றி விடுவாரா இல்லையா? அவருக்கு அச்சமில்லை. ஏன்? 500 ரூபாய் கொடுத்தால் போதும், ஓட்டு வந்துவிடும். ரொம்ப கோபமாக இருந்தால் கூடுதலாக ஒரு 500."என விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய சீமான், முதலமைச்சர் ஸ்டாலின் பேசுவது போன்ற மாடுலேஷனில் திராவிடம் பற்றி பேசினார். "திராவிடம் என்று பேசினாலே சிலருக்கு வயிறு எரிகிறது, திராவிடம் என்றால் இடத்தைக் குறித்தது, பிறகு மொழியைக் குறித்தது. ஒரு இனத்தைக் குறித்தது, இப்போது ஒரு அரசியல் சொல்லாக மாறியிருக்கிறது. திராவிடம் என்றால் எல்லோருக்கும் எல்லாம்" என்று பேசுகிறார். திராவிடம் என்றைக்கு ஒரு மொழியைக் குறித்தது? என்றைக்கு ஒரு இனத்தைக் குறித்தது? என்னத்தையாது கப்சா அடிச்சி விடுவது" என விமர்சித்துள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+