ஆசிரியர்களை வேலையை விட்டு போகும்படி செய்து அரசு பள்ளிகளை மூட திட்டம்.. சீமான் பகீர் குற்றச்சாட்டு
சென்னை: சென்னை டிபிஐ வளாகத்தில் போராட்டம் நடத்திவரும் இடைநிலை ஆசிரியர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து ஆதரவு அளித்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சீமான் கூறியதாவது:
இதற்கு முன்பு இதே கோரிக்கையை முன்வைத்து போராட்டம் நடத்தியபோது அரசு எழுத்துபூர்வமாக கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரிவித்திருந்தது. ஆனால், அதற்கு பிறகு அதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகாரத்தில் உள்ளவர்கள் பொய் பேசினால் குற்றம் இல்லையா.

தமிழ்நாடு என்று சொல்வதை விட இது போராட்டக்களம் என்று சொல்ல வேண்டும். ஆசிரியர்கள், உயர் மின் கோபுர எதிர்ப்பு போராட்டம், வங்கி ஊழியர்கள் போராட்டம் இப்படி நாடே போராட்ட களமாக உள்ளது. ஆனால் அரசு இதை நல்லாட்சி என்று சொல்கிறது. இது எப்படி நல்லாட்சி ஆகும். ஆசிரியர்களே வேலையை விட்டு போகும்படியான சூழலை உருவாக்கி அரசு பள்ளிகளை மூடும் திட்டத்தில் அரசு உள்ளது.
பசியும் பட்டினியுமாக ஆசிரியர்கள் போராட்டம் நடத்திகொண்டிருக்கிறார்கள். தினந்தோறும் போராட்டங்கள் நடந்துகொண்டே உள்ளது. இது நாடா, சுடுகாடா ? இதற்கு ஒரு அரசு, அதற்க்கு முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள் வேறு.
எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என உலகிற்கு தமிழ் வேதம் கற்பிக்கிறது. முதலில் அதை படியுங்கள். இவ்வாறு சீமான் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications