கொடநாடு, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு-எடப்பாடி பழனிசாமி மீது சீமான் 'ஒருமையில்’ திடீர் பாய்ச்சல்!
சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் உண்மையான குற்றவாளிகள் ஏன் இன்னமும் கைது செய்யப்படவில்லை? தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டவன் யார்? என அதிமுகவுக்கும் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் எதிராக திடீரென கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
சீமான் தம்மை திருமணம் செய்துவிட்டு ஏமாற்றிவிட்டதாக நடிகை விஜயலட்சுமி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார் கொடுத்திருந்தார். அத்துடன் கடந்த கால அதிமுக ஆட்சியில் சீமான் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை; அதிமுக அரசுதான் சீமானை பாதுகாத்தது எனவும் விஜயலட்சுமி குற்றம்சாட்டியிருந்தார்.

ஆனால் இது தொடர்பாக கருத்து தெரிவித்த சீமான், தொடர்ந்து என் மீது குற்றச்சாட்டுகளை கூறி வருகிறார் என்று மட்டுமே விஜயலட்சுமி குறித்த கேள்விக்கு பதிலளித்தார். அத்துடன் அதே பேட்டியில் அதிமுக, கொடநாடு கொலை, கொள்ளை குறித்தும் காட்டமாக விமர்சித்திருந்தார் சீமான்.
கொடநாடு வழக்கு: கொடநாடு கொலை, கொள்ளை குறித்து சீமான் நேற்று கூறியதாவது: கொடநாட்டில் கொலை நடந்தது உண்மையா? இல்லையா? நீங்கதான் பத்திரிகையாளர்கள் சொல்லனும். 6 பேர் செத்திருக்கான். கொன்னது யார்? செத்தது ஏன்? ஏன் கொன்னாங்க? எதற்காக செத்தாங்க? அதை பேசனும்தானே..
"பெருந்தகை" யாரு?: ஒருநாடு.. ஒரு முதலமைச்சர் இருக்கிற வீட்டில் போய் கொலை செய்திருக்காங்க.. அதை பற்றி பேசவே இல்லை. அப்புறம் நீங்க நானும் எம்மாத்திரம்? கொடநாட்டில் ஒரு நொடி கூட மின்சாரம் அணையாது. ஏனெனில் கொடநாடு எஸ்டேட்டுக்கு தனித் தடம், தனி மின்விநியோகப் பாதை. அந்த இடத்தில் ஒரு மணிநேரம் மின்சாரத்தை அணைத்த "பெருந்தகை" யாரு? இதை எல்லாம் கேள்வி கேட்கனும்ல..
துப்பாக்கி முனையில் மிரட்டல்: ஒரு நேர்மையாளன் என்றால் எதற்கும் பயப்படக் கூடாது. வந்தா வா.. வராட்டி போ.. உண்மை உண்மைதான்னு பேசனும். எதற்காகவும் உண்மையை விட்டுக் கொடுக்கக் கூடாது என்பார் விவேகானந்தர். ஓட்டுநர் கனகராஜின் சகோதரரை போலீசார் மிரட்டி உள்ளனர். உண்மையை சொல்லாதே என துப்பாக்கி முனையில் அவரை மிரட்டியிருக்கின்றனர்.
எடப்பாடி பணமா?: 2 மாதத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கின் குற்றவாளிகளை கைது செய்வோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தீர்களே.. முதலமைச்சர் கையில்தானே காவல்துறை இருக்கிறது. இப்போது இரண்டரை ஆண்டுகளாகிவிட்டதே.. ஏன் செய்யலை? அப்ப நீங்க எடப்பாடிகிட்ட பணம் வாங்கி இருக்கனும்.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு.. துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார்? எங்கிருந்து உத்தரவு வந்தது? அந்த அதிகாரிகளுக்கு என்ன தண்டனை? சட்டப்படி என்ன தண்டனை? அம்மா அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்து 6,7 மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?
சுட சொன்னவன் யாரு?: யாருடா உன்னை சுட சொல்லி உத்தரவு கொடுத்தவன்? மனு கொடுக்க வந்தவனை யார் சுட சொன்னது? கலவரம் நடந்துச்சுன்னு உன்னை முடிவு செய்ய சொன்னது யார்? எடுத்த உடனே துப்பாக்கிச் சூடு நடத்த சொன்னது யார்? உண்மை வெளியே வரனும்ல.. அநியாயத்தை எதிர்த்து போராடுனா சுட்டுக் கொல்வீங்க?. இவ்வாறு நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
-
சீமானை கூப்பிட்டு வச்சு அசிங்கப்படுத்திட்டாங்க.. சம்பளம் கொடுத்து சிக்கல்! LIK ட்ரெய்லர் பற்றி பிரபலம் ஓபன் -
தலித் வாக்குகளை பிரிக்கும் தவெக.. முக்குலத்தோர் வாக்குகளுக்கும் செக்.. சீமானுக்கு சவால் இருக்கு! -
நட்சத்திர தொகுதியாக மாறிய காரைக்குடி.. சீமானுக்கு எதிராக களம் காணும் 24 பேர்.. யார் யாருனு பாருங்க! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
பக்கத்திலேயே இருந்தும் கூட.. முகத்தை கூட பார்க்கவில்லை.. நோ சொன்ன ராகுல்.. கவனித்த ஸ்டாலின் -
மாதம் 1.2 கோடியா... இன்ஸ்டா அஸ்வினி அஷ் கல்லா கட்டுவது உண்மையா.. வாயை பிளக்கும் நெட்டிசன்கள் -
பிடிஆர் ஐ வீழ்த்த மதுரை மத்திய தொகுதியில் சுந்தர் சி வீசும் 1 மேஜர் அஸ்திரம்.. திமுகக்கு நெருக்கடி? -
3 மாநில சட்டசபை தேர்தல் LIVE: புதுச்சேரியில் மாலை 6 மணி நிலவரப்படி 89.2% வாக்குகள் பதிவு -
இன்னொரு சர்வேயும்.. கரெக்ட்டா இதையே சொல்லதே.. தவெக கட்சிக்கு தோல்வி.. அடித்து சொன்ன 4 கணிப்புகள்!












Click it and Unblock the Notifications