Sekar babu: எதிர்க்கட்சிகள் அரண்டு போகப்போகுது.. தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்.. அமைச்சர் சேகர்பாபு அப்டேட்
சென்னை: தமிழ்நாட்டில் வருகிற பிப்ரவரி 17ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில், தமிழக அரசு தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் அரண்டுபோகும் அளவுக்கு அறிவிப்புகள் இடம்பெற உள்ளன என்று அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் முதல்வர் படைப்பக பணிகளை ஆய்வு செய்தபின் அமைச்சர் சேகர் பாபு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, அவர் கூறியதாவது: தமிழக அரசு தாக்கல் செய்யும் இடைக்கால பட்ஜெட்டில் எதிர்க்கட்சிகள் அரண்டுபோகும் அளவு அறிவிப்புகள் இடம்பெற உள்ளன. உடைந்த கட்சியின் ஒரு பாகமாக இருக்கிற அன்புமணி பேசுவதற்கெல்லாம் பதில் சொன்னால் சரியாக இருக்காது.

பொய்யில் பிறந்த எடப்பாடி
எடப்பாடி பழனிசாமி வாயில் பொய்யைத் தவிர எதுவும் வராது. பொய்யிலே பிறந்து வளர்ந்து வந்தவர் எடப்பாடி பழனிசாமி. அவருடைய கட்சியில் இருந்து தற்போது விலகியுள்ள செங்கோட்டையன், கு.ப.கிருஷ்ணனிடம் கேட்டால் எடப்பாடி பழனிசாமியின் வண்டவாளம் தெரியும். தவெகவினரை ஆட்கள் வைத்து அடித்ததாக ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார் கூறிய குற்றச்சாட்டுக்கு, அவர்கள் சொல்வதை அப்படியே பேசக்கூடாது.
பொதுமக்கள், தவெகவினர்
பொதுமக்களுக்கும், தவெகவுக்கும் தான் பிரச்சனை. உண்மை நிலையை களத்திற்கு சென்று விசாரிக்க வேண்டும். பிரச்சனையில் பாதிக்கப்பட்டு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்கள் யார் என்பதை விசாரிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் முழுக்க முழுக்க பொதுமக்கள். பொதுமக்களுக்கும், தவெகவினருக்கும் இடையே ஏற்பட்ட மோதல் இது.
தவெக தாக்குதல்
எப்படி பனையூரில் பிரச்சனைகள், மோதல் தொடர்ந்து கொண்டிருக்கிறதோ அதே போன்ற மோதல் தான் இதுவும். திமுகவின் கொடி பட்டொளி வீசிப் பறக்கும். சென் ஜார்ஜ் கோட்டையில் எங்கள் முதல்வரை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தவெகவினர் தாக்கியதில் மகளிர் உட்பட 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதலமைச்சர் படைப்பகம்
பாதிக்கப்பட்டவர்கள் பொதுமக்களா, தவெகவினார என்று விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும். இதுபோன்ற செயல்களை வைத்து தங்கள் இயக்கத்திற்கு விளம்பரம் செய்கின்றனர். பிப்ரவரி 26 ஆம் தேதிக்குள் 10 முதலமைச்சர் படைப்பகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications