Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Sengottaiyan: தவெகவில் இணைகிறீர்களானு கேட்ட நிருபர்! ஒரு நாள் பொறுங்களேன்னு சொன்ன செங்கோட்டையன்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவில் இணைய போகிறீர்களா என்ற கேள்விக்கு "ஒரு நாள் பொறுத்திருங்கள்" என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருக்கிறார். இதனால் அவர் நாளை தவெகவில் இணைவது மறைமுகமாக சொல்லியிருப்பதாகவே பார்க்கப்படுகிறது.

அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மைக்காலமாக கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அதே நேரத்தில் எடப்பாடி பழனிசாமியால் வெளியேற்றப்பட்ட நிர்வாகிகளை மீண்டும் ஒன்றிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி கெடுவும் விதித்திருந்தார்.

sengottaiyan vijay tvk

எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார் கடந்த செப்டம்பர் மாதம் அவரது கட்சி பதவிகள் பறிப்புக்குள்ளானார். இந்த நிலையில் பசும்பொன்னில் கடந்த மாதம் இறுதியில் நடந்த தேவர் ஜெயந்திக்கு சென்ற செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரனுடன் இணைந்து தேவர் சிலைக்கு மாலை அணிவித்தார்.

அத்துடன் ஓபிஎஸ்ஸுடன் ஒரே காரில் பயணம் செய்து பசும்பொன்னிற்கு செங்கோட்டையன் சென்றார். அத்துடன் மூவரும் சேர்ந்து செய்தியாளர்களையும் சந்தித்தனர். மேலும் சசிகலாவுடனும் செங்கோட்டையன் சந்தித்து பேசியிருந்தார்.

கட்சி பதவி பறித்ததற்கு செங்கோட்டையனிடம் சசிகலா வேதனை தெரிவித்த போது கட்சியில் இருந்து நீக்கினாலும் மகிழ்ச்சிதான் என செங்கோட்டையன் கூறியிருந்தாராம். இந்த நிலையில் அடுத்த நாளே செங்கோட்டையன் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.

அவரை திமுகவின் பி டீம் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்திருந்தார். இந்த நிலையில் தன்னை அதிமுகவில் இருந்து நீக்கியது செல்லாது, எடப்பாடி பழனிசாமியே தற்காலிக பொதுச் செயலாளர் என்ற நிலையில் உள்ளார். தான் சட்ட ஆலோசகர்களுடன் ஆலோசித்து சட்ட நடவடிக்கை எடுக்க போவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் செங்கோட்டையன், எப்படியும் சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் இணைந்து அதிமுகவை ஒருங்கிணைக்கும் முயற்சியில் ஈடுபடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் செங்கோட்டையன் தவெகவில் இணைய போவதாக தகவல்கள் வெளியாகின. இது பொய்யாக இருக்கும் என்றும் சொல்லப்பட்டது. ஆனால் தவெகவில் இணைகிறீர்களா என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் எந்த மறுப்பையும் சொல்லவில்லை.

அது போல் ஆதவ் அர்ஜுனாவும், நிர்மல் குமாரும் இந்த கேள்விக்கு மறுக்காமல் மழுப்பினர். இந்த நிலையில் ஈரோடு குள்ளம்பாளையம் வீட்டிலிருந்து செங்கோட்டையன் சென்னை ஆழ்வார்பேட்டை வீட்டிற்கு வந்திருந்தார். அவர் சபாநாயகரை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ய போவதாகவும் சொல்லப்பட்டது.

அவர் இன்று ஆழ்வார்பேட்டை வீட்டிலிருந்து சபாநாயகரை பார்க்க சென்ற செங்கோட்டையன் திடீரென வீடு திரும்பினார். பின்னர் ஓரிரு மணி நேரம் கழித்து சபாநாயகரை , தலைமைச் செயலகத்தில் போய் சந்தித்தார். அங்கு அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வதற்கு முன்பு, செங்கோட்டையனிடம், செய்தியாளர்கள், "தவெகவில் இணைகிறீர்களா" என்ற கேள்விக்கு "ஒரு நாள் பொறுத்திருங்கள்" என கூறிவிட்டுச் சென்றார். எனவே நாளை செங்கோட்டையன் எந்த கட்சியில் இணைய போகிறார் என்பது தெரியவரும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+