தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்றார்களே.. இன்று தர்மமே வென்றது.. ஓபிஎஸ்ஸை சாடிய செங்கோட்டையன்
சென்னை: தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்றார்களே இன்று தர்மமே வென்றுவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை தேவை என எடப்பாடி பழனிச்சாமி தீவிரம் காட்டி வந்தது. இதை ஓபிஎஸ் எதிர்த்தார். இரட்டை தலைமையே சரி வரும் என்றார். இந்த நிலையில் கடந்த 8 நாட்களாக ஓபிஎஸ் - எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்களிடையே சலசலப்பு காணப்பட்டது.
இந்த நிலையில்தான் அதிமுக பொதுக் குழு கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என எடப்பாடி பழனிச்சாமிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் அவரோ கூட்டத்தை தள்ளி வைக்கும் அளவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. திட்டமிட்டபடி கூட்டம் நடைபெறும் என பதில் கடிதம் எழுதினார்.

காவல்துறை
இதையடுத்து ஆவடி காவல் துறைக்கும் ஓபிஎஸ் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் உள்அரங்கில் நடைபெறும் கூட்டத்திற்கு தடை விதிக்க முடியாது என கைவிரித்துவிட்டது. இந்த நிலையில்தான் ஜெயலலிதா நினைவிடத்தில் வேளச்சேரியை சேர்ந்த கேசவன் எனும் தொண்டர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயற்சித்தார்.

ட்விட்டர் பக்கம்
இதை அறிந்த ஓபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தருமத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்; தருமம் மறுபடியும் வெல்லும்" என்பதை இங்கு சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன் என தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கு விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது.

3 மணி நேரம்
சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தரப்பு - இபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் காரசார விவாதத்தை முன் வைத்தனர். இந்த நிலையில் அதிமுக பொதுக் குழு கூட்டம் நடத்த தடை விதிக்க முடியாது என உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியது. மேலும் அதிமுக சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொள்ளவும் தடை விதிக்க முடியாது என தீர்ப்பளிக்கப்பட்டது.

தர்மம் வென்றது
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் என்றார்கள். இன்று தர்மம் மறுபடியும் வென்றுள்ளது. நாளை திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்றார்.
-
2000 ரூபாய் மகளிர் உரிமை தொகை சாத்தியமா .. மக்கள் அறிய வேண்டிய பெரிய உண்மை -
எடப்பாடி பழனிசாமிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்.. 'நாளை பார்ப்பீர்கள்'.. அதிரடி பேட்டி -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன்












Click it and Unblock the Notifications