நோ முதல்வர் வேட்பாளர்! கைகோர்க்கும் விஜய் + செங்கோட்டையன்.. எடப்பாடியின் மிகப்பெரிய கனவு கலைகிறது!
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நாளை தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்று அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது. செங்கோட்டையன் தவெக செல்வதால் அதிமுகவிற்கு கடுமையான சில நெருக்கடிகள், சிக்கல்கள் ஏற்படும் சூழல் உள்ளது.
1. அதிமுக விஜயின் தமிழக வெற்றிக் கழகம் உடன் கூட்டணி வைக்க தீவிரமாக முயன்று வருகிறது. இதற்கான ஆசையை எடப்பாடி பழனிசாமி வெளிப்படையாகவே கூறி இருக்கிறார்.

2. ஏற்கனவே அதிமுக கூட்டணியில் தவெக இணைய உள்ளதாக எடப்பாடி பழனிசாமி சூசகமாகப் பேசி இருந்தார். குமாரபாளையம் தேர்தல் பரப்புரையில், அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி அமைப்போம் என எடப்பாடி பழனிசாமி பேசினார். அப்போது, கூட்டத்திற்கு நடுவே சிலர் தவெக கொடியை உயர்த்தி உற்சாகமாக கோஷமிட்டனர். அப்போது, 'கொடி பறக்குது, கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டுவிட்டது ஸ்டாலின் அவர்களே.. இந்த ஆரவாரம் உங்கள் செவியைத் துளைக்கும்' எனக் கூறினார் எடப்பாடி பழனிசாமி.
3. தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உடன் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாக தகவல்கள் பரபரக்கும் சூழலில் கூட்டணி தொடர்பாக மக்கள் மத்தியில் கூட்டணி பற்றி வெளிப்படையாக பேசினார் எடப்பாடி பழனிசாமி.
4. ஆனால் விஜய் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. அதிமுகவுடன் கூட்டணி வைப்போம் என்று எங்குமே விஜய் பேசவில்லை.
5. இப்படிப்பட்ட நிலையில்தான் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நாளை தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இன்று அவர் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என்றும் கூறப்படுகிறது. செங்கோட்டையனுக்கு அங்கே வலிமையான பதவி கொடுக்கப்படும் என்கிறார்கள்.
6. அதாவது அமைப்பு செயலாளர் போன்ற பதவி அதே சமயம் முடிவு எடுக்கும் அதிகாரம் அதிகம் உள்ள பதவி கொடுக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இப்படி செங்கோட்டையன் தவெக செல்வதால் அதிமுகவிற்கு கடுமையான சில நெருக்கடிகள், சிக்கல்கள் ஏற்படும் சூழல் உள்ளது.
7. செங்கோட்டையனுக்கு கட்சியில் அதிக பவர் இருக்கும் என்பதால்.. அவர் அதிமுக கூட்டணி உருவாகாமல் பார்த்துக்கொள்வார். அதாவது அதிமுக - தவெக கூட்டணி உருவாகி அது வென்றால், அது எடப்பாடிக்குத்தான் சாதகம். அதை செங்கோட்டையன் விரும்ப மாட்டார்.
8. எனவே இந்த கூட்டணிக்கு தவெக உள்ளே இருந்தே செங்கோட்டையன் முட்டுக்கட்டை போடுவார்.
9. ஒருவேளை கூட்டணி உருவாகிறது என்றாலும்.. எடப்பாடியை முதல்வர் வேட்பாளராக இருக்க அனுமதிக்க மாட்டார். தவெக வழியாக இதற்கு எதிராக பிரஷர் போடுவார். ஏனென்றால் இப்போதே NDA கூட்டணியில் எடப்பாடி பழனிசாமி முதல்வர் வேட்பாளர் ஆக இருப்பதை செங்கோட்டையன் விரும்பவில்லை. இதனால் தவெகவில் தனக்கு கிடைக்கும் பவரை வைத்து எடப்பாடி ஆசைக்கும் செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைப்பார்.
10. இப்படி செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் சென்று இருப்பது எடப்பாடி பழனிசாமிக்கு மிகப்பெரிய சிக்கலாக மாறி உள்ளது. தவெக உடன் கூட்டணி வைக்க முடியாத நிலை எடப்பாடிக்கு ஏற்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications