“செங்கோட்டையன் சும்மா ஒன்னும் போகல.. கொங்கு பகுதியில் காலியாகும் அதிமுக!” - மூத்த பத்திரிகையாளர்
சென்னை: அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்று விஜய்யை சந்தித்திருக்கிறார். விரைவில் அவர் தவெகவில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இது அதிமுகவுக்கு கொங்கு பகுதியில் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்று பத்திரிகையாளர் ப்ரியன் கூறியுள்ளார்.
இன்று விஜயை சந்தித்து இருப்பதன் மூலம், பல்வேறு வதந்திகளுக்கு செங்கோட்டையன் முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார். இன்று காலை தன்னுடைய எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தபோது, அவர் திமுகவில் இணைவார் என்று பரவலாக பேச்சுகள் எழுந்தன.

ஆனால், தற்போது விஜய்யை சந்தித்திருப்பதன் மூலம் அவர் தமிழக வெற்றிக் கழகத்திற்கு செல்வது உறுதியாகியிருக்கிறது. செங்கோட்டையன் ஒரு அணியாக சென்று தமிழக வெற்றிக் கழகத்தில் சேர்வார் என்று பேசப்பட்டது. டிடிவி தினகரன் மற்றும் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருடன் விஜய்யை சந்திப்பார் என்று பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், தற்போது தனியாக சந்தித்திருக்கிறார். 9 முறை எம்எல்ஏவாக இருந்திருக்கிறார். 50 ஆண்டு கால அரசியலில் ஏராளமான அனுபவங்கள் செங்கோட்டையனுக்கு இருக்கிறது. இதெல்லாம் தமிழக வெற்றி கழகத்திற்கு பயன்படும்.
ஆனால், அக்கட்சியில் இளம் தலைமுறையினர் அதிகபட்சமாக இருப்பார்கள் என்பதால், இவருடைய அரசியல் பணிக்கும் இளைஞர்களின் நிர்வாக தலைமைக்கும் இடையில் பொருத்தம் சரியில்லாமல் கூட போகலாம்.
அதேபோல அதிமுகவிலிருந்து செங்கோட்டையன் தவெகவுக்கு சென்று இருப்பது, அதிமுகவில் இருந்து மேலும் சில நிர்வாகிகள் பிரியலாம் என்கிறாய் ஊகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. தற்போது வரை, அதிமுகவைப் பற்றி விஜய் நேரடியாக எந்த விமர்சனத்தையும் வைக்கவில்லை. இருப்பினும் செங்கோட்டையனின் பிரிவு அதிமுகவை பலவீனப்படுத்தும்.
பொதுவாக அதிமுகவிலிருந்து விலகுபவர்கள் திமுகவுக்குதான் வருவார்கள் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில், அப்படி எல்லாம் இல்லை தமிழக வெற்றி கழகத்திற்கு கூட போக முடியும் என்கிற கேட்டை செங்கோட்டையன் ஓபன் செய்திருப்பதாக கருதுகிறேன். இதே போல அதிமுகவின் ஆதரவு வாக்குகள் குறிப்பாக கொங்கு மண்டலத்தில் அதிமுக ஆதரவு வாக்குகள் சரிய வாய்ப்பு இருக்கிறது" என்று கூறியுள்ளார்.
அதிமுகவிலிருந்து பிரிந்தவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் என்பது செங்கோட்டையனின் கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் எடப்பாடி பழனிசாமி, இதை காது கொடுத்து கேட்காதது மட்டுமல்லாது, செங்கோட்டையனை ஓரம் கட்டவும் தொடங்கினார். பிரிந்தவர்கள் சேர 10 நாட்கள் அவகாசம் தருகிறேன் என்று செங்கோட்டையன் பேசியது எடப்பாடியை சீண்டியது. இதனையடுத்து 10 நாட்கள் அவகாசமும் முடிந்தது. இதனையடுத்து கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் செங்கோட்டையன் நீக்கப்பட்டார். இறுதியாக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் நீக்கப்பட்டார்.
இதனையடுத்து நேற்றிரவு புறப்பட்டு காலை சென்னை வந்த செங்கோட்டையன், சபாநாயகர் அப்பாவுவை சந்தித்த ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். பின்னர் விஜய்யை நேரில் சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
தமாகா வேட்பாளர்கள் பெயர்களை அறிவித்த ஜிகே வாசன்! தாமரை சின்னம்.. 5 தொகுதிகளில் கடும் சவால்! -
"ஆபாசமாக பேசி மிரட்டல் விடுக்கும் விர்ச்சுவல் வாரியர்ஸ்".. விஜய் மீது ரஞ்சனா நாச்சியார் புகார்! -
கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலினை எதிர்த்து களமிறங்கும் ராயபுரம் மனோ? எடப்பாடி பக்கா பிளான்! -
விஜய் பிரசாரத்தை முடக்கவே சாலையில் பள்ளம் தோண்டப்பட்டதா? என்ன நடந்தது தெரியுமா? மாநகராட்சி விளக்கம் -
எடப்பாடியை சந்தித்ததுமே மனம் மாறிய பூவை ஜெகன்மூர்த்தி.. அதிமுக கூட்டணியில் தான் போட்டி என அறிவிப்பு -
பெரம்பூரில் விஜய்க்காக அரங்கேறும் திரைமறைவு சதி! பலிகடாவாக்கப்படுகிறதா அதிமுகவின் வெற்றிவாய்ப்பு! -
டிக் அடித்த எடப்பாடி.. 2வது கட்ட வேட்பாளர் லிஸ்டை வெளியிடாதது ஏன்? பின்னணியில் மாஸ்டர் பிளான்! -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
Vijay: அரசியல் சூதாடி யார்? விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! பொன்ராஜ் பதிலடி! -
மதுரையில் மன்னன், எஸ்ஸார் கோபிக்கு சீட் கிடையாது.. ஆப்பு வைத்த செல்லூர் ராஜு.. எடப்பாடி ட்விஸ்ட்! -
பெரம்பூரில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. காரணம் என்ன? தவெக பரபர ஆலோசனை! -
சிவகார்த்தி, அஜித் குடும்பம் பத்தி தவெகவினர் இழிவா பேசினப்ப எங்கிருந்தீங்க - விஜய்யை விளாசிய சீமான்












Click it and Unblock the Notifications