முனைவர் பட்டம்.. முட்டுக்கட்டையிட்ட மூடர்கள்..சங்கரய்யா இரங்கலில் ஆளுநர் ரவி மீது ஆ.ராசா பாய்ச்சல்!
சென்னை: மறைந்த முதுபெரும் இடதுசாரித் தலைவர் சங்கரய்யாவுக்கு முனைவர் (டாக்டர்) பட்டம் வழங்க மறுத்த தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திமுக துணைப் பொதுச்செயலாளரும் லோக்சபா எம்.பி.யுமான ஆ.ராசா மிக கடுமையாக விமர்சித்துள்ளார்.
102 வயதில் முதுபெரும் இடதுசாரித் தலைவர் சங்கரய்யா இன்று காலமானார். தேசத்தின் விடுதலைக்காக போராடி சிறை தழும்புகளை தாங்கியவர். நாட்டின் தொழிலாளர் வர்க்க விடுதலைக்காக வாழும் காலம் முழுவதும் அப்பழுக்கற்ற இடதுசாரித் தலைவராக திகழ்ந்து 'இன்குலாப் ஜிந்தாபாத்" என புரட்சி முழக்கமிட்டவர் சங்கரய்யா.

இந்திய அரசியலில்- தமிழ்நாட்டு அரசியலில் நெடும் பயணத்தில் இணைந்திருக்கும் மகத்தான மாபெரும் ஆளுமை புரட்சியாளர் சங்கரய்யா. 102 வயதில் முதுமையில் மறைந்த சங்கரய்யாவுக்கு அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கலையும் வேதனையையும் தெரிவித்து வருகின்றனர்.
முதல்வர் ஸ்டாலின்: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், பொதுத் தொண்டே வாழ்க்கையென வாழ்ந்த தகைசால் தமிழர் - முதுபெரும் பொதுவுடைமைப் போராளி - விடுதலைப் போராட்ட வீரர் தோழர் என். சங்கரய்யா அவர்களுக்குச் செவ்வணக்கம்! தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய தொண்டினைப் போற்றும் விதமாக அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் பிரியாவிடை கொடுப்போம் என அறிவித்திருந்தார். இந்த இரங்கல் அறிக்கையிலேயே, சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்த விவகாரத்தை சுட்டிக் காட்டி கடுமையாக சாடி இருந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். இதேபோல பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் சங்கரய்யா இரங்கல் செய்தியில், ஆளுநர் ரவியின் அண்மைய இந்த நடவடிக்கையை கடுமையாக விமர்சித்துள்ளனர்.
ஆ.ராசா எம்.பி: திமுகவின் துணைப் பொதுச்செயலாளரான ஆ.ராசா எம்.பி. தமக்கே உரிய பாணியில் கடுமையாக ஆளுநர் ஆர்.என்.ரவியை தமது இரங்கல் குறிப்பில் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக ஆ.ராசா எம்.பி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: அதிகாரப்பூர்வமாய் 'இந்திய' தேசியக் கொடி உச்சி ஏறும் நிமிடம் வரை சிறையிலிருந்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகச் செம்மல் சங்கரைய்யா மறைந்தார். முனைவர் பட்டம் வழங்க முட்டுக்கட்டையிட்ட மூடர்களுக்கும் சேர்த்து அரைக் கம்பத்தில் பறக்கட்டும் அந்தக் கொடி! இவ்வாறு ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
-
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு -
திடீர் அதிமுக சப்போர்ட்.. என்னாச்சு திருமாவளவனுக்கு.. குழப்பி எடுக்கும் விசிக.. அறிவாலயம் குழப்பம்! -
தங்கம் விலையில் நடக்க போகும் சுனாமி.. எச்சரித்த பிரபல வங்கி.. கிராமிற்கு ரூ.2500க்கும் மேல் குறையும்.! -
தமிழ் புத்தாண்டு பலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளுக்கான பலன்கள்.. யாருக்கு அதிர்ஷ்டம்? -
நல்ல பாம்பு கடித்த சிறுவனை கங்கையில் 12 மணி நேரம் மிதக்க விட்ட பெற்றோர்.. உடனே அதிசயம் நடந்ததா












Click it and Unblock the Notifications