அருண் கோயலுக்கே பிடிக்காத விஷயத்தை பாஜக செய்ய சொன்னதா? அது என்ன? பாயிண்டை பிடித்த சீனியர் புள்ளி
சென்னை: இந்திய தலைமை தேர்தல் ஆணையர் அருண் கோயல் பதவி விலகியது ஏன் என்பதை விளக்க வேண்டும் என மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவை தேர்தல் அடுத்த வாரம் அறிவிக்கப்படவுள்ள நிலையில் தேர்தல் ஆணையர் அருண் கோயல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவருடைய பதவிக்காலம் 2027ஆம் ஆண்டு வரை உள்ள நிலையில் அவருடைய ராஜினாமா தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவும் ஏற்றுக் கொண்டார். இதையடுத்து கோயல் நேற்று முதலே பணியிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டில் தேர்தல் ஆணையர் காலி இடங்களின் எண்ணிக்கை 2 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் மட்டுமே இருக்கிறார்.
தேர்தல் ஆணையத்தில் மூவர் இடம் பெறவேண்டிய நிலையில் தேர்தல் ஆணையர் அனுப் சந்திர பாண்டே கடந்த பிப்ரவரி மாதம் ஓய்வு பெற்றார். அவர் ஏன் விலகினார் என்பது குறித்து எந்த காரணமும் தெரிவிக்கப்படவில்லை. எதிர்க்கட்சிகள் , பாஜகவின் அழுத்தம் காரணமாக அருண் கோயல் ராஜினாமா செய்துள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றன.
இந்த நிலையில் இதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் ராதாகிருஷ்ணன் தனது வீடியோவில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்துள்ளார். இது ஏன் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருக்கிறது. அவருக்கு ஓய்வு காலம் என்பது 2027 இல்தான்.
3 தேர்தல் ஆணையர்கள் இருக்க வேண்டிய இடத்தில் தற்போது இருவர் மட்டுமே உள்ளார்கள். அருண் கோயலின் இந்த ராஜினாமாவால் தற்போது ஒரு தேர்தல் ஆணையர் இருக்கும் அமைப்பாக மாறிவிட்டது. என்னை பொருத்தமட்டில் அருண் கோயல் பாஜகவின் கிளை அலுவலகத்தை தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நடத்தி கொண்டு வந்தார்.
அவருடைய மனதிற்கே பிடிக்காத ஒரு விஷயம். என்ன இவர்கள் கேட்டார்கள். அந்த விஷயத்தை அருண் கோயல் விளக்கினால் நன்றாக இருக்கும். அருண் கோயல் விலகலால் பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். ஏனென்றால் நம் இந்திய ஜனநாயகம் தோன்றிய காலம் முதல் இதுவரை இப்படி ஒரு நிகழ்வு நடந்ததே கிடையாது.
தேர்தல் ஆணையம் பல காலங்களில் பாரபட்சமாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தது. அது மத்தியில் எந்த ஆட்சியில் இருந்தாலும் தேர்தல் ஆணையம் பாரபட்சத்துடன்தான் நடந்து கொண்டது. ஆனால் இந்த மாதிரி திடீர் ராஜினாமாவை நான் பார்க்கவில்லை. இந்த ராஜினாமாவின் பின்னணி என்ன என்பதை அருண் கோயல்தான் விளக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது.
ஏனென்றால் அவருக்கும் இந்திய ஜனநாயகத்தில் பங்கு இருக்கிறது என்றுதான் நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன். அவரும் இந்த மத்திய அரசாங்கமும் விளக்க வேண்டும். இவ்வாறு ராதாகிருஷ்ணன் தனது வீடியோவில் தெரிவித்துள்ளார்.
-
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே?












Click it and Unblock the Notifications