பாமகவில் போட்டியிடக் கூட ஆள் இல்லையே.. ராமதாஸின் ஓபன் டாக்- மூத்த தலைவர்கள் படுஅப்செட்!
சென்னை: பாமகவில் போட்டியிடக் கூட ஆள் இல்லையே... தேர்தலில் போட்டியிட ஆளைத் தேட வேண்டும் போலிருக்கிறது... அந்தமானில் இருந்து கப்பலில் அழைத்து வந்திருப்பேன் என்றெல்லாம் அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளிப்படையாக பேசியிருப்பதை அக்கட்சியின் மூத்த தலைவர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
Recommended Video
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்வது குறித்து சட்டமன்ற தொகுதிகளின் நிர்வாகிகளின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசித்து வருகிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ். இந்த கூட்டங்களில் நாம் ஆண்ட பரம்பரை.. அன்புமணி தலைமையில் பாமக ஆட்சி அமைத்தாக வேண்டும்; குறைந்தது 60 எம்.எல்.ஏக்களைப் பெற வேண்டும் என வலியுறுத்துகிறார் டாக்டர் ராமதாஸ்.

மா.செக்கள்தான் காரணம்
மேலும் சட்டசபை, உள்ளாட்சித் தேர்தலில் பாமக தோல்வியை சந்திக்க காரணமே மாவட்ட செயலாளர்கள்தான்.. உங்களால் முடியவில்லை என்றால், ஒரு மாடு மேய்க்கும் சிறுவனிடம் 1 லட்சம் வாக்கு வாங்க முடியுமா என்று கேட்பேன்.. அவன் முடியும் என்று சொன்னால் அவனையே மாவட்ட செயலாளராக போட்டுக்கொள்வேன் என்றெல்லாம் ஏகத்துக்கும் கடுப்படித்தார் ராமதாஸ்.. அதேபோல் கடலூரில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட ஆட்கள் இல்லை என்று சொல்லியிருந்தால் அந்தமானிலிருந்து கப்பலில் 50 பேரை அழைத்து வந்து போட்டியிட வைத்திருப்பேனே.. கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் உழைக்கத் தயாராக இருந்தால் பதவிகளில் நீங்களே இருங்க.. என்றும் பேசியிருந்தார் ராமதாஸ்.

கட்சியில் ஆளே இல்லை
திண்டிவனத்தில் நடத்தப்பட்ட கூட்டத்தில், பாமக நிர்வாகிகளை வறுத்து எடுத்ததுடன், தன்னிடமிருந்த ஆதங்கத்தையும் ஆத்திரத்தையும் கொட்டித்தீர்த்தார் டாக்டர் ராமதாஸ். தேர்தலில் போட்டியிட ஆள் தேட வேண்டும் போலிருக்கிறது... போட்டியிட கட்சியில் ஆளே இல்லை என்று சொல்லுமளவுக்கு அவரது பேச்சு இருந்தது. இந்த ஆதங்கம் மீடியாக்களில் பரவலாக எதிரொலித்தது.

சீனியர்கள் அப்செட்
இந்த நிலையில், டாக்டர் அன்புமணியிடம் பேசும் சீனியர் பாமகவினர், அய்யா, இந்தளவுக்கு உணர்ச்சிவயப்பட்டிருக்கக்கூடாது. அவர் பேசியது நம் கட்சியின் பலவீனத்தை காட்டுகிறது. கட்சி பலவீனமாக இருப்பது அம்பலமானால் நம் கட்சிக்காரர்களும் சோர்ந்து போய்விடுவர்.

உணர்ச்சிவசப்பட்டால் எப்படி?
நம் சமூகமும் பாமகவை சாதாரணமாகத்தான் பார்க்கும். இது நம் கட்சியின் வளர்ச்சிக்கு உதவாது. அதனால், உணர்ச்சிவயப்படாமல் அய்யா இருக்க வேண்டும். அதை நீங்கள் தான் பக்குவமாக எடுத்து சொல்ல வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனராம்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications