வென்டிலேட்டரில் சுவாசிக்கும் செந்தில் பாலாஜி.. பைபாஸுக்கு பின் எப்படி இருக்கிறார்? புதிய அப்டேட்
சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் அவர் தற்போது வென்டிலேட்டரில் சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தமிழக மின்சாரத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் அமலாக்கத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் அங்கு ஆஞ்சியோ கிராம் எடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு இதயத்தில் 3 முக்கிய குழாய்களில் அடைப்பு இருப்பதாக சொல்லப்பட்டது. அதிலும் ஒன்று 90 சதவீதம் அடைப்பு இருப்பதால் அவருக்கு உடனடியாக பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.
இதனிடையே அவரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதனால் அவரை 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்படுவதால் அவரை தனியார் மருத்துவமனையில் வைத்து சிகிச்சை அளிக்க வேண்டும் என மனைவி மேகலா நீதிமன்றத்தை நாடினார். பின்னர் நீதிமன்ற உத்தரவின் பேரில் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் அவரிடம் முக்கிய கேள்விகளை கேட்க அமலாக்கத் துறை 15 நாட்கள் காவல் கேட்டது. ஆனால் நீதிமன்றமோ பல நிபந்தனைகளுடன 8 நாட்கள் காவல் கொடுத்தது. செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய எந்தநேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்ததால் அவரிடம் நீதிமன்ற உத்தரவை மீறி அமலாக்கத் துறையால் விசாரணை நடத்த முடியவில்லை.
இந்த நிலையில் நேற்றைய தினம் 5 மணி நேரமாக அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அவருடைய இதயத்தில் இருந்த அடைப்புகள் எடுக்கப்பட்டதாகவும் அங்கு ஒரு ஸ்டென்ட் கருவி வைக்கப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி எப்படி இருக்கிறார் என்பதை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று அறுவை சிகிச்சை நடந்த நிலையில் வெண்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். சென்னை காவேரி மருத்துவமனையில் சிறப்பு தீவிர சிகிச்சை பிரிவில் 24 மணி நேரமும் கண்காணிப்பில் உள்ளார். 24 மணி நேரத்திற்கு பின் செயற்கை சுவாசம் அகற்றப்பட்டு, இயற்கையாக சுவாசிக்க தொடங்குவார். தற்போது மயக்க மருந்து முழுவதும் செயலிழந்து அவருக்கு வலி நிவாரணிகள் கொடுக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
-
தேசிய ஜனநாயக கூட்டணியில் விஜய்.. நெருங்கும் பேச்சுவார்த்தை.. ஒரே வார்த்தையில் உடைத்த சரத்குமார் -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
தேமுதிகவை திமுக கூட்டணிக்கு அனுப்பியதே எஸ்.பி.வேலுமணிதான்! கோவை ஈஷாவில்.. கொளுத்தி போட்ட புகழேந்தி -
Election Exclusive: துணை முதல்வர் விஜய்.. அல்வா மாதிரி ஆஃபர்களை அள்ளி வீசும் அமித் ஷா! செம கடுப்பில் எடப்பாடி பழனிசாமி! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான் -
சிலிண்டர் காலி.. LPG இல்லை.. சென்னையில் இன்று மூடப்படும் முக்கிய ஹோட்டல்கள்.. நிலைமை கையை மீறுது -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை!












Click it and Unblock the Notifications