டெல்லி புறப்பட்டார் செந்தில்பாலாஜி.. கரூர் வழக்கில் சிபிஐ விசாரணைக்கு நாளை ஆஜர்! கூடவே ராஜீவ் காந்தி
சென்னை: கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அவருடன் திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தியும் சென்றுள்ளார்.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியாகினர். கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவு படி, சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று (மார்ச் 15) மூன்றாவது முறையாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் 7 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த வழக்கில் கரூரைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தவெக குற்றம்சாட்டியுள்ளது. இந்தச் சூழலில் சிபிஐ சம்மன் அனுப்பியதன் பேரில், விசாரணைக்கு ஆஜராவதற்காக இன்று இரவு சென்னை விமான நிலையத்திலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார் செந்தில் பாலாஜி.
கரூர் துயரச் சம்பவம் தொடர்பான வழக்கில் சிபிஐ விசாரணைக்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி ஆஜராகிறார். டெல்லி சென்றுள்ள செந்தில் பாலாஜியுடன் திமுக கொள்கை பரப்பு இணை செயலாளர் ராஜீவ் காந்தியும் சென்றுள்ளார். நாளை காலை சிபிஐ அதிகாரிகள் முன் செந்தில் பாலாஜி ஆஜராக இருக்கிறார்.
முன்னதாக இன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையிடம் செந்தில் பாலாஜி டெல்லி செல்வது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், "41 பேர் உயிரிழந்த சம்பவத்தின் போது, அங்கு எந்த விளம்பரமும் இல்லாமல் முதலில் சென்றவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தான். ஆனால் திமுக மருத்துவர் அணி என 10 ஆம்புலன்ஸ்களை எடுத்துக்கொண்டு வந்து செந்தில் பாலாஜி லைவ் கவரேஜ் செய்துகொண்டிருந்தார்.
விடிய விடிய போஸ்ட் மார்ட்டம் நடந்தது. ஆனால் விளாத்திக்குளம் மாணவி வழக்கில் இன்னும் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வரவில்லை. இதையெல்லாம் பார்த்தால் நமக்கு சந்தேகம் வருமா இல்லையா? 10 ரூபாய் பாலாஜி என்று சொன்னவுடன் தான் செருப்பு வீசப்பட்டுள்ளது.
செந்தில் பாலாஜியிடம் கண்டிப்பாக விசாரணை நடத்தப்பட வேண்டும். உண்மை வெளியே வர வேண்டும். சிபிஐ விசாரணைக்கு செல்வதால் கடந்த ஒரு வாரமாக அவர் மிகவும் பதற்றமாக இருக்கிறார். செய்தியாளர்கள் கேள்வி கேட்டால் அவர்கள் மீது பாய்கிறார்" என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
-
கோவை போத்தனூர் -கரூர் இடையே தனி ரயில் பாதை.. காங்கேயம்,வெள்ளக்கோவில் வழியாக அமைக்க பயணிகள் கோரிக்கை -
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
துண்டு துண்டாக உடைகிறதா திமுக ஓட்டு? சென்னை வேளச்சேரி தவெக விஜய் 18% வாக்குகளா? ஷாக் பாயிண்ட் -
“ரூ.5 கோடி கேட்குறாங்க.. இதுதான் நீங்க சொன்ன மாற்றமா விஜய்?” நிர்வாகிகள் கொந்தளிப்பு -
காத்திருந்து காத்திருந்து! புதுவையில் தவெகவுடன் இணைந்த கூட்டணி! அப்போ அந்த 2 வேட்பாளர்கள் நிலை? -
தேதி குறிச்சாச்சு.. மேடையேறும் விஜய்.. மாமல்லபுரத்தில் தவெக வேட்பாளர் அறிமுக கூட்டம் -
அதிமுகவிற்கு 17% கூட இல்லை.. 146 தொகுதியில் 3-ம் இடம் போயிட்டாங்க.. ஆதவ் அர்ஜுனாவின் புதிய டேட்டா -
புஸ்சி ஆனந்த் ஒழிக.. கோஷமிட்ட தவெக நிர்வாகிகள்.. புதுவையில் போட்டியிட சீட் வழங்காததால் ஆதங்கம் -
வேல்முருகனின் மெகா பிளான் இதுவா? வன்னியர் சமூக வாக்குகளை வளைக்க பார்க்கிறாரா? -
Election Exclusive: அணில் மோட் ஆக்டிவேட் பண்ணுங்க.. நண்பா நண்பீஸ் ரெடியாகுங்க! எலக்சனுக்கு முன் விஜய் போடும் மெகா ப்ளான் -
பாஜக கூட ஓகே.. தவெகதான் பிரச்சனை.. செல்வப்பெருந்தகை சரமாரி குற்றச்சாட்டு -
2026 தேர்தலில் புதிய சக்திகள்! 5 முனை போட்டிக்கு வழிவகுத்த ஜூனியர்ஸ்! யாருக்கு சாதகம்? பாதகம்? -
பெரம்பூரில் விஜய் வெல்வாரா? ‘ஒன் இந்தியா' நேரடி கள ரிப்போர்ட்.. மக்கள் யார் பக்கம்? வீடியோ -
பாம்புக்கும் எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன வித்தியாசம்? நாஞ்சில் சம்பத் ஒற்றை கேள்விக்கு அதிமுக நறுக் -
என்னது நாங்க தவெகவை கூட்டணிக்கு அழைத்தோமா.. கடுகடுத்த செல்லூர் ராஜூ













Click it and Unblock the Notifications