மதுரை ஹைகோர்ட் கிளை நீதிபதியே தீர்ப்பு கொடுத்திருக்காரு.. நிரூபிக்க நான் ரெடி.. செந்தில் பாலாஜி
சென்னை: அணிலால் மின் தடை ஏற்படும் என்பதை புள்ளி விவரங்களுடன் எங்கும் வந்து நிரூபிக்க தயாராக உள்ளதாக தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததும் தொடர்ச்சியாக மின் தடை ஏற்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கு பதிலளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கடந்த அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் செய்ததாலும் மின்கம்பிகளுக்கு இடையில் அணில்கள் விளையாடுவதாலும் மின் தடை ஏற்படுகிறது என தெரிவித்தார்.
இதையடுத்து சமூகவலைதளங்களில் செந்தில் பாலாஜியின் விளக்கத்தை கிண்டல் செய்தனர். மேலும் அவருக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவும் கிண்டல் செய்திருந்தார்.

பராமரிப்பு
இந்த நிலையில் இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், தமிழகத்தில் 9 மாதங்களாக மின் வாரியத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் மின் மாற்றிகள் உள்ளிட்ட கருவிகளில் பழுது ஏற்பட்டு மின் தடை ஏற்படுகிறது. இது சரியானதும் தடையில்லா மின்சாரத்தை திமுக அரசு கொடுக்கும்.

மின்கம்பி
அணில் போன்றவை ஆபத்து அறியாமல் மின் கம்பிகளில் தாவி விளையாடும் போது சார்ட் சர்க்யூட் ஏற்பட்டு மின்மாற்றிகள் டிரிப் ஆகிவிடுகின்றன. அமெரிக்காவில் அதிக மின்தடை அணில்களால் ஏற்படுகின்றன. இதை அந்நாட்டு பத்திரிகைகளே தெரிவித்துள்ளன. இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன்.

இழப்பீடு
அவர்களும் இதையே புள்ளி விவரங்களுடன் கருத்துகளை தெரிவித்த கருத்துகள் அடிப்படையில்தான் மின் தடைக்கு அணிலும் ஒரு காரணம் என நான் சொன்னேன். அதிமுக ஆட்சியில் தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை சேர்ந்த சரவணன் என்பவர் மின் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். அவரது தந்தை இழப்பீடு கேட்டு மதுரை உயர்நீதிமன்ற கிளையை அணுகினார்.

நீதிபதி
அந்த வழக்கில் அணில்களால் மின்மாற்றியில் பழுது ஏற்பட்டு அதை சரி செய்ய போன போதுதான் சரவணன் உயிரிழந்ததாக தமிழக மின்வாரியம் சார்பில் நீதிமன்றத்திற்கு எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அணில்களால் விபத்து நடக்குமா என்பதை அறிவதற்காகவே மதுரை ஹைகோர்ட் கிளை நீதிபதியே சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்துள்ளார். அணில்களால் மின் தடை ஏற்படும், மின் கம்பிகள் உரசும் போது விபத்தும் ஏற்படும் என்பதை உணர்ந்தே அவர் தீர்ப்பளித்துள்ளார் என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
-
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
ஹார்டு டிஸ்க் மாயமா? மின்வெட்டு பிரச்சனையை திசை திருப்ப முயற்சி.. விளாசிய செந்தில் பாலாஜி -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications