நடுராத்திரி.. மேம்பாலம் மேலே நடந்த பாலியல் அக்கிரமம்.. 3 பேரிடம் சிக்கிய பெண்.. சென்னையில் ஷாக்

இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை தரப்பட்டுள்ளது

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடுராத்திரி பிரிட்ஜ் மேல், ஒரு இளம்பெண்ணை தூக்கி சென்று பாலியல் தொல்லை தந்திருக்கிறார்கள் 3 காமுகர்கள்..!

சென்னை அண்ணா மேம்பாலத்தில் நள்ளிரவு ஒரு பெண் தனியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.. அவருக்கு 30 வயது இருக்கும்.. நடுஇரவு என்பதாலும், தனியாக செல்வதையும் கவனித்த 3 இளைஞர்கள் அந்த பெண் பின்னாடியே சென்றனர்..

 Sexual Torture to North Indian Woman in Chennai

பிறகு திடீரென அந்த பெண்ணை வழிமறித்து அண்ணா மேம்பாலத்தில் இருந்து, அந்த பிரிட்ஜ் கீழ் பகுதிக்கு தூக்கி சென்றனர்.. அங்கு ஆள்நடமாட்டம் இல்லை என்பதால், பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளனர்... ஆனால், அந்த பெண் அலற ஆரம்பித்துள்ளார்..

அந்த சத்தம் கேட்டு, பொதுமக்கள் எங்கிருந்து சத்தம் வருகிறது என்று தேடினர்.. பிறகு உடனடியாக போலீஸ் கன்ட்ரோல் ரூமுக்கும் போன் செய்தனர். பக்கத்திலேயே தேனாம்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் உள்ளதால், அவர்கள் விரைந்து வந்தனர்.. போலீஸை கண்டதும் அந்த 3 பேரும் தப்பி ஓடிவிட்டனர். பிறகு போலீசார் அதே பகுதியில் பெண்ணை தேட ஆரம்பித்தனர்.

அப்போதுதான், பிரிட்ஜ்-க்கு கீழே இருட்டான இடத்தில் மிரண்டு போய் அழுது கொண்டே இருந்தது தெரியவந்தது.. அவரது உடம்பெல்லாம் காயங்கள் இருந்தன.. உடனடியாக அந்த பெண்ணை மீட்ட போலீசார் முதலுதவி சிகிச்சை தந்தனர்.. இதையடுத்து விசாரித்ததில், அந்த பெண் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் என்றும், வேலை விஷயமாக சென்னைக்கு வந்ததும் தெரியவந்தது..

பிறகு உடனடியாக அந்த பெண்ணை ஒரு காப்பகத்தில் பத்திரமாக போலீசார் ஒப்படைத்தனர்.. இந்த சம்பவம் தொடர்பாக தேனாம்பேட்டை மகளிர் போலீஸ் விசாரணையை நடத்தி வருகின்றனர்.. அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவையும் ஆராய்ந்து வருகின்றனர்.. தப்பி ஓடிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+