பிசிசிஐயை நினைச்சா அசிங்கமா இருக்கு! உலக கோப்பையே சர்க்கஸ் மாதிரி ஆகிடுச்சு! விளாசிய சுமந்த்! ஏன்?
சென்னை: உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரியம் பிசிசிஐ அமைப்பை பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமனும் பிசிசிஐ அமைப்பை விமர்சனம் செய்துள்ளார்.
இந்தியா ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி தற்போது நடந்து வருகிறது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய ஆப்கானிஸ்தான் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வருகிறது. 3 விக்கெட்டுகளை இழந்து 66 ரன்களை எடுத்து ஆப்கானிஸ்தான் ஆடி வருகிறது.
இந்திய அணியில் அஸ்வின் நீக்கப்பட்டு உள்ளார். ஷரத்துல் தாக்கூர் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார். டெல்லியில் இந்த மேட்ச் நடந்து வருகிறது. ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் , ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விமர்சனம்: கடந்த உலகக் கோப்பை வரை.. 50 ஓவர் உலக கோப்பை தொடர் நடக்கிறது என்றாலே பெரிய அளவில் கொண்டாட்டமான மனநிலை இருக்கும். மக்கள் பலரும் இதற்காக காத்து இருப்பார்கள் . தொடர் தொடங்குகிறது என்றாலே பெரிய எதிர்பார்ப்பு மனநிலை இருக்கும். ஆனால் இந்த முறை அப்படி கொண்டாட்டமான மனநிலை இல்லை.

உதாரணமாக முதல் போட்டி நடந்த அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் பெரிதாக கூட்டமே இல்லை. முதல் போட்டி நடந்த போதே பிசிசிஐ அமைப்பின் செயலாளராக இருக்கும் ஜெய் ஷா மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டன. மைதானத்தில் 10000 பேர் கூட இல்லை என்று விமர்சனம் வைக்கப்பட்டது. 1.5 லட்சம் பேர் இருக்க வேண்டிய மைதானத்தில் வெறும் 15000 பேர் கூட இல்லை. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் இந்த நிலைமை. அதுவும் உலகக் கோப்பை கிரிக்கெட்டின் முதல் போட்டியில் இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால்தான் செயலாளர் ஜெய் ஷா மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்டது.
ஐசிசி உலகக் கோப்பை 50 ஓவர் தொடர் 2023க்கு பொறுப்பான பிசிசிஐ செயலாளரான ஜெய் ஷா, இந்தியா நடத்தும் மிகப்பெரிய தொடரின் தொடக்க ஆட்டத்தில் தனது சொந்த மாநிலத்தில் 50% மைதானம் கூட நிரம்பியிருப்பதை உறுதிப்படுத்த முடியவில்லை. டிக்கெட் சரியாக விற்கப்படவில்லை. மிகக் குறைந்த அளவிலான டிக்கெட்டுகள் மட்டுமே உண்மையான ரசிகர்களுக்குக் கிடைத்தன. கடைசி வரை இவர்கள் டிக்கெட்டை விற்கவில்லை என்பது இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
தர்மசாலா: அதேபோல் தர்மசாலா மைதானம் மோசமாக இருக்கிறது. மைதானத்தில் ஓடவே முடியவில்லை. ஈரமாக இருக்கிறது. புல் தரை மோசமாக உள்ளது. புல் தரை ஈரமாக சொத சொதவென்று இருக்கிறது. இதனால் அங்கே ஆட முடியவில்லை என்று கிரிக்கெட் வீரர்கள் பலர் கூறி இருந்தனர். இதன் காரணமாகவும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா மீது கடுமையாக விமர்சனம் வைக்கப்பட்டது.
( இப்போ சொல்லுங்க சீக்கா! இதுதான் சுத்திப்பார்க்க வந்த பாகிஸ்தானா? கிரிஸ் ஸ்ரீகாந்தை விளாசிய நெட்டிசன்)
தொடக்க விழா : இந்த நிலையில் தற்போது தொடக்க விழா மீண்டும் நடக்க உள்ளது. அதன்படி அகமதாபாத்தில் இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் நடக்க உள்ளது. இந்த போட்டிக்கு முன்பாக தொடக்க விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இதை பலரும் விமர்சனம் செய்கின்றனர்.
முதல் நாள் தொடக்க விழா நடத்தாமல் இப்போது நடத்துவதை விமர்சனம் செய்துள்ளனர். இதை கிண்டல் செய்துள்ள கிரிக்கெட் விமர்சகர் சுமந்த் சி ராமன், தொடருக்கான தொடக்க விழா நடத்தப்படவில்லை. ஆனால் ஒரே ஒரு உலக கோப்பை போட்டிக்கு இதெல்லாம் தேவையா? இந்த #CricketWorldCup2023 சர்க்கஸாக மாறி வருகிறது. பிசிசிஐ அமைப்பை நினைத்தால் அசிங்கமாக இருக்கிறது என்று சுமந்த் சி ராமன் கூறியுள்ளார்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications