ரசிகர்களை ஏமாற்றிய பிரமாண்ட இயக்குநர் ஷங்கர்.. ‘கேம் சேஞ்சர்’ படத்தில் சறுக்கிய விஷயங்கள்!
சென்னை: ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிப்பில் உருவான 'கேம் சேஞ்சர்’ திரைப்படம் ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் திரையரங்குகளில் அண்மையில் வெளியானது. இப்படம் வெற்றி அடைந்ததா, இல்லையா என்பது ரசிகர்களிடமும் திரை விமர்சகர்களிடமும் தற்போதும் விவாதமாக உள்ளது.
இந்திய சினிமாவின் பிரமாண்ட இயக்குநராக திகழும் ஷங்கர், தனது திரைப்படங்களில் தரமான கதைகளின் மூலம் உலகளாவிய ரசிகர்களை கவர்ந்தவர். தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் உருவாக்கப்பட்ட 'கேம் சேஞ்சர்’ படம், பான் இந்தியா அளவில் பிரம்மாண்டமாக வெளியிடப்பட்டது. ஆனால் 'கேம் சேஞ்சர்,’ எதிர்பார்த்த அளவிலான வெற்றியைப் பெறவில்லை. இந்தப் படத்தில் ஷங்கர் சறுக்கிய இடங்கள் சில உள்ளன.

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின் கருத்து
விமர்சகர்கள் படத்தை கலவையான விமர்சனங்களுடன் வரவேற்றனர். 'அந்நியன்', 'எந்திரன்' போன்ற படங்களை இயக்கிய ஷங்கரின் பழைய கைத்திறன் இதில் குறைவாக இருந்ததாகவும், அவரது கலைத் திறன் பாணி மாறி உள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
'கேம் சேஞ்சர்’ படம் மிகவும் எதிர்பார்ப்புடன் வெளியானாலும், அதன் பட்ஜெட்டிற்கேற்ப முழுமையான வெற்றியை அடையவில்லை.
ஷங்கர் தனது வலிமையான திரைக்கதையை மீட்டெடுக்க, தரமான கதாபாத்திரங்களுடன் புதிய முயற்சிகளை செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.
- குரு கிருஷ்ணன்












Click it and Unblock the Notifications