"ராஜாவே ஒன்ன காணாத நெஞ்சு".. பேக்கிரவுண்ட் பாட்டு.. விஜயகாந்த் போட்டோவுடன் உருகிய சண்முகபாண்டியன்
சென்னை: மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் அவரது தந்தை குறித்து உருக்கமான பதிவை போட்டுள்ளார்.
கேப்டன், கருப்பு எம்ஜிஆர், கருப்பு நிலா, வள்ளல், கருணையுள்ளம் என பட்டப்பெயர்களை விஜயகாந்துக்கு அடுக்கிக் கொண்டே போகலாம். அப்படிப்பட்ட நல்ல மனிதர், மார்கழி மாதத்தில் இந்த மண்ணுலகை விட்டு பிரிந்து விண்ணுலகம் சென்றார்.

தீவுத்திடலில் வைக்கப்பட்ட அவரது உடலை ஏராளமான ரசிகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் கோயம்பேடு தேமுதிக தலைமை அலுவலகத்தில் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
விஜயகாந்தின் உடலுக்கு 15 லட்சம் பேர் அஞ்சலி செலுத்தினார்கள் என பிரேமலதா தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தந்தையின் இறப்பால் மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் மனம் உடைந்து அழுதனர். தந்தையின் இறப்பில் தொடங்கிய அழுகை இறுதி சடங்கையும் தாண்டி நீடித்தது.
தந்தை விஜயகாந்த் மகன்கள் மீது அதிக பாசம் கொண்டவர். என்னதான் பிசிஸாக ஷூட்டிங்கில் இருந்தாலும் வீட்டில் இருந்தால் மகன்களுடன் நேரத்தை செலவிட விரும்புவார். அந்த வகையில் சண்முக பாண்டியன் தனது தந்தை குறித்து உருக்கமான பதிவை போட்டுள்ளார். அதில் தனது தந்தையின் புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் அவர் எழுதியிருப்பதாவது: எனது தந்தை இறப்பிற்கு இதயப்பூர்வமாக நன்றி தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. எனது தந்தையின் இறுதி ஊர்வலம் கோயம்பேடு தேமுதிக அலுவலகத்தை நோக்கி வந்த போது சாலைகள், பாலங்கள் மீது லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த ஆதரவு என் அப்பா எத்தகைய வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார், எத்தனை அன்புகளை சம்பாதித்திருக்கிறார் என்பதையே காட்டுகிறது. அப்பாவின் இந்த பேரழிப்பிலிருந்து மீண்டு வர உங்கள் அனைவரின் ஆதரவும் எங்களுக்கு இதமாக உள்ளது. என் அப்பா, நம் கேப்டனின் ஆன்மா சாந்தியடையட்டும் என சண்முகபாண்டியன் குறிப்பிட்டுள்ளார். அதில் அழும் எமோஜியை போட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications