"என் பொண்டாட்டி கூட குடும்பம் நடத்துற நீ!" நள்ளிரவில் சென்னையில் ரவுடி படுகொலை.. பரபர பின்னணி
சென்னை: கடந்த சில நாட்களுக்கு முன்பு நந்தனம் பகுதியில் ரவுடி வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், இது தொடர்பாக சில பகீர் தகவல்கள் இப்போது வெளியாகியுள்ளது.
சென்னை சைதாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த கௌதம் (25) என்பவர் பிரியா என்ற பெண்ணுடன் வசித்து வந்துள்ளார். இதற்கிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கௌதம் திடீரென நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்.

விசாரணை: ரவுடியான கௌதம் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருந்துள்ளன. சரித்திர பதிவேடு குற்றவாளியான அவரை 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துவிட்டுத் தப்பியோடியது. இந்தச் சம்பவம் குறித்து தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.
அப்போது பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது ஏற்கனவே கொலை, கொள்ளை என பல்வேறு வழக்குகளைக் கொண்ட கௌதம் அப்பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்துள்ளார். அப்போது பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரண் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கௌதம் அடிக்கடி ராஜ்கிரண் வீட்டிற்குச் சென்றுள்ளார். இருவரும் வீட்டிலேயே மணிக்கணக்கில் பேசிக் கொண்டும் இருப்பார்களாம்.
பகீர் பின்னணி: அப்போது ராஜ்கிரணின் மனைவி பிரியாவை கௌதமுக்கு பிடித்துப் போனதாம். இருவரும் பேசிக்கொள்ளவே அது விரைவில் காதலாக மாறி இருக்கிறது. நண்பனுக்குத் துரோகம் செய்து விட்டு அவரது மனைவியுடன் பழக ஆரம்பித்துள்ளார். ஒரு கட்டத்தில் பிரியா தனது கணவர் ராஜ்கிரணை விட்டுவிட்டு குழந்தைகளைக் கூட்டிச் சென்று கௌதமுடன் வாழ ஆரம்பித்துள்ளார். இருவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.
அவர்கள் சைதாப்பேட்டையில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கியுள்ளனர். மனைவி தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால் ராஜ்கிரண் அடிக்கடி அங்குச் சென்று பிரச்சினை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ராஜ்கிரணை கொலை செய்ய கௌதம் முடிவு செய்தாக கூறப்படுகிறது. அதன்படி சில மாதங்களுக்கு முன்பு அவரை கௌதம் வெட்டியுள்ளார். இருப்பினும், ராஜ்கிரண் பிழைத்துக் கொண்டார். இது தொடர்பான வழக்கில் கௌதம் கைது செய்யப்பட்டு திறையிலும் அடைக்கப்பட்டு இருந்தார்.
என்ன நடந்தது: இந்தச் சூழலில் தான் சமீபத்தில் ஜாமீனில் கௌதம் வெளியே வந்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட உடன் ஆத்திரமடைந்த ராஜ்கிரண், தன்னுடைய நண்பர்கள் உதவியுடன் கௌதமை கொலை செய்ய முடிவு செய்துள்ளார். அதன்படி கடந்த மே 15ஆம் தேதி நள்ளிரவில் நண்பர்களைக் கூட்டிக் கொண்டு ராஜ்கிரண் அங்குச் சென்றுள்ளார். அந்த கும்பல் கௌதமின் வீட்டுக் கதவைத் தட்டியுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் அவர்கள் கதவைத் திறக்கவில்லை. சாவி துவாரம் வழியாக வெளியே யார் என்பதைப் பார்த்துள்ளனர்.
அப்போது தான் பிரியாவின் கணவர் ராஜ்கிரண் வேறு சிலருடன் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதனால் அச்சமடைந்த பிரியா மற்றும் கௌதம் கதவைத் திறக்காமல் வீட்டுக்குள்ளே இருந்துள்ளனர். நீண்ட நேரமாகியும் கதவைத் திறக்காததால் ஆத்திரமடைந்த ராஜ்கிரண் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே வந்துள்ளார்.
படுகொலை: வீட்டில் புகுந்த உடன் ராஜ்கிரணும் அவருடன் வந்தவர்களும் கௌதமை சரமாரியாக வெட்டத் தொடங்கினர். இதைப் பார்த்துப் பதறிய பிரியா அவர்களைத் தடுக்க முயன்றுள்ளார்.. இதனால், அவர் மீதும் அரிவாள் வெட்டுகள் விழுந்துள்ளன. அதேநேரம் ராஜ்கிரணும் அவருடன் வந்தவர்களும் கௌதமை குறிவைத்து வெட்டி சாய்த்துள்ளனர். இதனால் கௌதம் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.
கொலை செய்துவிட்டு ராஜ்கிரண் தப்பிச் சென்றுள்ளது. இருப்பினும் இரவு ரோந்து பணிகளில் ஈடுபட்ட போலீசார் அந்த ஆட்டோவை மடக்கிப் பிடித்து சோதனை செய்துள்ளனர். அதில் பயங்கர ஆயுதங்கள் இருந்ததால் ராஜா (28), பிரதீப் (26), தி.நகரைச் சேர்ந்த சுரேஷ் (27) ஆகியோரை கைது செய்தனர். ராஜ்கிரண் உள்பட சிலர் தப்பிச் சென்றுவிட்ட நிலையில், அவர்களையும் போலீசார இப்போது தேடி வருகிறார்கள்.
-
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
சென்னை எல்லையில் புது பேருந்து நிலையம்! பிரம்மாண்ட கிரீன்ஃபீல்ட் பஸ் ஸ்டாண்ட்! எங்க இருக்கு தெரியுமா -
2030-க்கு பிறகும் இந்திய IT துறை காணாமல் போய்விடும்.. டிசிஎஸ் சிஇஓ கிருதிவாசன் சொன்ன முக்கிய விஷயம்! -
"நீங்களே 4 முறை ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சிக்கு போனீங்கள்!" நீதிபதியை பார்த்து கெஜ்ரிவால் சொன்ன வார்த்தை! -
படுபாவி எதுக்கு வந்தீங்க? லெஃப்ட் ரைட் வாங்கிய ராமதாஸின் செல்ல மகள்! ஸ்டன்னாகி நின்ற ஜிகே மணி? -
அஜிதாவை திமுகவில் சேர்ப்பதற்கு முன்.. ஸ்டாலின் டீமிடம் இருந்து சென்ற வார்னிங்.. என்ன நடந்தது? -
நீலாங்கரை வீட்டில் ஏணி போட்டு காம்பவுண்ட் சுவரில் ஏறிய விஜய்! மரக்கிளையை பிடித்து கொண்டு செய்த செயல் -
சிறகடிக்க ஆசை: ரோகிணி சொன்ன ஒரே ஒரு உண்மை! விஜயா வசமா சிக்கியாச்சு.. அண்ணாமலை எடுத்த முடிவு












Click it and Unblock the Notifications