சென்னை பாரிமுனை பார்சலில் திகில்! மண்டை ஓடு அனுப்பிய 3 பேர் கைது! விசாரணையில் பகீர்!
சென்னை: சென்னை பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஒருவருக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கொடுத்தனுப்பிய பார்சலில் மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகள் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வியாசர்பாடி, ராஜாஜி தெருவை சேர்ந்தவர் ஸ்ருதி (29). இவர் பாரிமுனை அரண்மனைக்காரன் தெருவில் உள்ள ஒரு தனியார் டூல்ஸ் விற்பனை நிறுவனத்தில் அக்கவுன்ட்டன்ட்டாக பணியாற்றி வருகிறார்.

நேற்று முன் தினம் மாலை கடைக்கு யாரோ அடையாளம் தெரியாத நபர் வந்தாராம். அப்போது அங்கிருந்த பாதுகாப்பு காவலர் கிருஷ்ணலால் என்பவரிடம், ஸ்ருதியின் பெயரை சொல்லி அவருக்கு ஒரு பார்சல் வந்திருப்பதாகவும் அதை அவரிடம் கொடுத்துவிடுங்கள் என்றும் சொல்லிவிட்டு சென்றாராம்.
இதையடுத்து காவலாளி அந்த பார்சலை உள்ளே கொண்டு போய் ஸ்ருதியிடம் கொடுத்தாராம். அப்போது ஸ்ருதி , " நான் எந்த பொருளையும் ஆர்டர் செய்யவில்லை. இது எனக்கு வந்திருக்காது" என்றாராம்.
இதனால் அந்த காவலாளி, சந்தேகமடைந்து அவரே அந்த பார்சலை பிரித்து பார்த்தாராம். அதை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்தார். அந்த பார்சலில் ஒரு மனித மண்டை ஓடு , மூன்று எலும்புத் துண்டுகள், ஒரு விபூதி பொட்டலம் ஆகியவை இருந்ததை கண்டு அதிர்ந்தார்.
உடனே அருகில் இருந்த எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் அந்த மண்டை ஓட்டை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கடையை சுற்றியுள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர்.
இதையடுத்து அந்த பார்சல் கொடுத்த நபரை தேடி வந்தனர். மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் பட்டபகலில் இப்படி ஒரு பார்சலை கொடுத்துச் சென்றது யார் என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அந்த மண்டை ஓட்டை அனுப்பியது ஓட்டேரியை சேர்ந்த தினேஷ் (37) என தெரியவந்தது. அவரது குடும்பத்தினருக்கும் ஸ்ருதியின் குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் இருப்பதாகவும், இதனால் ஸ்ருதியை பயமுறுத்த மனித மண்டை ஓட்டை அனுப்பியதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து தினேஷை கைது செய்த போலீஸார், அவரது கூட்டாளிகளான சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த ஜோசப் (60), சீனிவாசன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
-
“தேவையில்லாம பேசின.. அவ்ளோதான்”.. விஜய்யை விமர்சித்த இளைஞரை விரட்டிச் சென்று மிரட்டிய ரசிகை! -
Gold Price: தலைகீழாக குறைந்த தங்கம் விலை.. ஒரே நாளில் 2 முறை அதிரடியாக சரிந்தது! நகை பிரியர்கள் குஷி -
அதிகாலையில் ஷாக்! தாறுமாறாக உயர்ந்த விமான கட்டணம்! சென்னை-தூத்துக்குடிக்கு டிக்கெட் ரேட்டை பாருங்க -
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் டிரான்ஸ்பரான சந்தீப் ராய் ரத்தோர் டிஜிபியானது எப்படி? இரவில் நடந்தது என்ன? -
சென்னைவாசிகளுக்கு மிக பெரிய நிம்மதி.. சீரானது புறநகர் ரயில் சேவை.. வழக்கமான அட்டவணையில் இயக்கம்! -
சென்னையின் மெகா மேக் ஓவர்.. நகரின் மையத்தில்.. வரப்போகும் 3 மேஜர் திட்டங்கள்.. இன்ஜினியரிங் அதிசயம்! -
LPG கேஸ் சிலிண்டர் பதுக்கினால் குண்டர் சட்டம் பாயும் - தமிழ்நாடு அரசு அதிரடி எச்சரிக்கை! -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications