சென்னையில் பரபரப்பு! வக்கீல் வீடு மீது துப்பாக்கிச்சூடு? போலீசார் தீவிர விசாரணை!
சென்னை: தாம்பரம் முடிச்சூர் பகுதியில் வழக்கறிஞர் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை துளைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டிற்குள் மர்ம நபர் யாரோ துப்பாக்கிச்சூடு நடத்தினரா? என்பது குறித்தும் எப்படி துப்பாக்கி குண்டு வந்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் மீனம்மாள் தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தியாகராஜன். இந்த நிலையில் இவரது வீட்டில் திடீரென ஒரு சத்தம் கேட்டது. அப்போது வீட்டில் இருந்த தியாகராஜன் மனைவி பிரியா ஓடிச்சென்று பார்த்தார். அப்போது வீட்டின் வரவேற்பு அறை கண்ணாடியை துளைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டுக்குள் விழுந்து கிடந்தது.

துப்பாக்கி குண்டை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி குண்டை ஆய்வு செய்து பார்த்தனர். இதில், அது சிறிய ரக துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு என்று தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார், வழக்கறிஞர் என்பதால், அவருக்கு வழக்கு தொடர்பாக எதிரிகள் யாரும் மிரட்டல் விடுப்பதற்காக இப்படி செய்துள்ளனரா? இல்லை கை தவறி அங்கு குண்டு வந்ததா என்பது குறித்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து தடயவியல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, போலீசார் வழக்கறிஞர் தியாகராஜனின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் வெளியே பார்த்த போது, தெருவில் இருந்து மர்ம நபர் ஒருவர் மெயின் ரோடு நோக்கி வேகமாக சென்றதாக அவரது மனைவி பிரியா தெரிவித்தார். இதன் காரணமாக மர்ம நபர் யாரோ, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே!












Click it and Unblock the Notifications