சென்னையில் பரபரப்பு! வக்கீல் வீடு மீது துப்பாக்கிச்சூடு? போலீசார் தீவிர விசாரணை!
சென்னை: தாம்பரம் முடிச்சூர் பகுதியில் வழக்கறிஞர் வீட்டின் ஜன்னல் கண்ணாடியை துளைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு வந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது வீட்டிற்குள் மர்ம நபர் யாரோ துப்பாக்கிச்சூடு நடத்தினரா? என்பது குறித்தும் எப்படி துப்பாக்கி குண்டு வந்தது என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னையை அடுத்த தாம்பரம் அருகே முடிச்சூர் பகுதியில் மீனம்மாள் தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் தியாகராஜன். இந்த நிலையில் இவரது வீட்டில் திடீரென ஒரு சத்தம் கேட்டது. அப்போது வீட்டில் இருந்த தியாகராஜன் மனைவி பிரியா ஓடிச்சென்று பார்த்தார். அப்போது வீட்டின் வரவேற்பு அறை கண்ணாடியை துளைத்துக்கொண்டு துப்பாக்கி குண்டு ஒன்று வீட்டுக்குள் விழுந்து கிடந்தது.

துப்பாக்கி குண்டை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த அவர் சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் துப்பாக்கி குண்டை ஆய்வு செய்து பார்த்தனர். இதில், அது சிறிய ரக துப்பாக்கியில் இருந்து வந்த குண்டு என்று தெரியவந்தது.
தொடர்ந்து போலீசார், வழக்கறிஞர் என்பதால், அவருக்கு வழக்கு தொடர்பாக எதிரிகள் யாரும் மிரட்டல் விடுப்பதற்காக இப்படி செய்துள்ளனரா? இல்லை கை தவறி அங்கு குண்டு வந்ததா என்பது குறித்தும் அங்குள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரித்து வருகின்றனர். தொடர்ந்து தடயவியல் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு மேற்கொண்டனர்.
தொடர்ந்து, போலீசார் வழக்கறிஞர் தியாகராஜனின் குடும்பத்தினரிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, துப்பாக்கி குண்டு சத்தம் கேட்டதும் வெளியே பார்த்த போது, தெருவில் இருந்து மர்ம நபர் ஒருவர் மெயின் ரோடு நோக்கி வேகமாக சென்றதாக அவரது மனைவி பிரியா தெரிவித்தார். இதன் காரணமாக மர்ம நபர் யாரோ, துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி ஓடினாரா? என்ற கோணத்திலும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
-
தேர்தல் ஆணையத்தின் அதிரடி ‘டிரான்ஸ்பர்’ மேளா.. காலியான எடப்பாடி கணக்கு... ஸ்டாலின் பவர்ஃபுல் மூவ்! -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
வில்லிவாக்கத்தில் ட்விஸ்ட்.. ஆதவ் அர்ஜுனாவுக்கு அடிக்குமா ஜாக்பாட்? களம் எப்படி இருக்கிறது? -
"கொஞ்ச நேரம்.." என கொஞ்சியபோது காதலில் விழாதவர் உண்டோ? ஆஷா போஸ்லேவின் மறக்க முடியாத தமிழ் பாடல்கள் -
தவெக ஆட்சிக்கு வந்த 6 மாதத்தில் தமிழ்நாடு சேவை உரிமை சட்டம்.. குமரியில் விஜய் அளித்த வாக்குறுதிகள் -
ஈரான் விரித்த வலையில் ஈரானே சிக்கிடுச்சு.. அமெரிக்காவே கவலைப்படும் அளவிற்கு நிலைமை கைமீறியது -
மகளிர் உரிமைத் தொகை.. இன்னும் ஆட்டம் முடியல.. வரப்போகும் 2 ‘மெகா’ மாற்றங்கள்.. கவனிங்க! -
விட்டு விளாசிய பிடிஆர்! கோபத்தின் உச்சிக்கே போன குஷ்பு சுந்தர் சி.. மோதல் உச்சகட்டம்! என்ன நடக்குது? -
இஸ்லாமாபாத் டாக்ஸ்.. ட்ரம்ப் - ஈரான் டீல்.. இந்தியா மிஸ் செய்த சான்ஸ்? அடித்து தூக்கிய பாகிஸ்தான் -
அவ்ளோதான் முடிச்சுவிட்டீங்க போங்க.. ஒரே வரியில் தவெக பர்னிச்சரை சல்லி சல்லியாக்கிய ஸ்டாலின் -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
கோவை ஈஷா யோகா மையத்தில் எஸ்.பி.வேலுமணியுடன் பேசியது என்ன? உடைத்து பேசிய பிரேமலதா












Click it and Unblock the Notifications