Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மக்களே கவனம்! சென்னையில் இங்கெல்லாம் நாள் முழுக்க மின்சாரம் இருக்காது! உங்க ஏரியா இருக்கா பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: தலைநகர் சென்னையில் தாம்பரம் மற்றும் தண்டையார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளைய தினம் அறிவிக்கப்பட்ட மின் தடை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மின்தடை என்பது மிகப் பெரிய பிரச்சினையாகவே இருந்தது. தினசரி குறைந்தது சில மணி நேரமாவது அறிவிக்கப்பட்ட மின்வெட்டு இருக்கும் என்ற சூழலே இருந்தது.

Shutdown Various area of Chennai have power cut from morning 9 to 2 on August 14

ஆனால், இப்போது தமிழ்நாட்டில் நிலைமை மாறிவிட்டது. மின்சார உற்பத்தி அதிகரித்துள்ளது. குறிப்பாகப் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் ஆகியவற்றில் மின் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் தமிழ்நாடு இப்போது மின்மிகை மாநிலமாகவே மாறிவிட்டது.

குறிப்பாக தமிழ்நாடு இப்போது மற்ற மாநிலங்களுக்குக் கூட மின்சாரம் சப்ளை செய்வதாகவே மின்சார துறை அமைச்சரே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூறியிருந்தார். இதனால் தமிழ்நாட்டில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அல்லது மின் பற்றாக்குறையால் ஏற்படும் மின்வெட்டு என்பது இல்லை. இப்போது இங்கே பெரும்பாலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மட்டுமே மின்வெட்டு இருக்கிறது.

அதன்படி நாளைய தினம் தாம்பரம் மற்றும் தண்டையார்பேட்டை பகுதிகளில் மின் தடை இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஏரியாக்களில் குறிப்பிட்ட பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 14) மின்சாரம் இருக்காது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த இடங்களில் எல்லாம் மின்சாரம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது

தாம்பரத்தை பொருத்தவரை பல்லாவரம் கோவளம் தெரு, கோவிலம்பாக்கம், அதியமான் தெரு, சுபம் நகர், காமாட்சி நகர் வடக்குப்பட்டு பிரதான சாலை, பெல் நகர், அண்ணாமலை நகர், ராதா நகர் ஜிஎஸ்டி சாலை, பாலாஜி பவன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின் தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தண்டையார்பேட்டையில் காலடிப்பேட்டை டிஎச் சாலை, ராஜாக்கடை, திருச்சினாங்குப்பம், எல்லையம்மன் கோவில் தெரு, எண்ணூர் விரைவு சாலை, திலகர் நகர், பிகேஎன் காலனி, குமரன் நகர், பிபிடி சாலை அத்திப்பட்டு காட்டுப்பள்ளி, சேப்பாக்கம், தமிழ் கொரஞ்சூர், கே.ஆர். பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது.

இந்த பகுதிகளில் எல்லாம் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை இந்த இடங்களில் எல்லாம் மின்சாரம் இருக்காது. ஒரு வேளை 2 மணிக்கு முன்பே பராமரிப்பு பணிகள் நிறைவடைந்தால் மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+