கஞ்சா வச்சிருக்கியான்னு கேட்குறாங்க.. நண்பரை அடிச்சிருக்காங்க! பாடகர் அசல் கோலார் குற்றச்சாட்டு
சென்னை: பிரபல ராப் பாடகர் அசல் கோலாரின் மலேசிய நண்பர் நவீன்ராஜை, குடியுரிமை அலுவலக அதிகாரிகள் தாக்கியதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். சுற்றுலா விசாவிற்கு வந்த நவீன்ராஜ் விசா முடிந்தும் சென்னையில் இருந்தது தொடர்பாக அதிகாரிகள் விசாரிக்க சென்றபோது அடித்ததாகவும் கஞ்சா வைத்து இருக்கிறீர்களா? எனக் கேட்டதாகவும் அசல் கோலார் குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல ராப் பாடகர் அசல் கோலார். வசந்தகுமார் என்னும் இயற்பெயர் கொண்ட இவர், திரைத்துறையில் அசல் கோலார் என்று அறியப்படுகிறார். இவர் கானா இசை & ராப் பாடல்கள் பாடுவதில் வல்லவர். யூ டியூப்பில் இவரது ராப் பாடல்கள் பதிவேற்றம் செய்து திரைத்துறையில் பலரின் கவனத்திற்கு சென்று தற்போது திரைப்பட பாடல்கள் பாடி வருகிறார்.

'யார்ரா அந்த பையன்.. நான்தான் அந்தப் பையன்..', 'என்ன சண்டைக்குக் கூப்டா..' உள்ளிட்ட பாடல்கள் மூலம் இன்றைய தலைமுறையினர் அதிகம் முணுமுணுக்கும் பாடல்கள் லிஸ்ட்டில் இவரது பாடலும் இடம்பெற்றுள்ளது. தமிழ், மலையாள மொழிகளில் பரபரப்பான பாடகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். கானா இசை, ராப் பாடல்கள் பாடுவதில் வல்லவரான இவர் கடந்த ஆண்டு பிக்பாஸ் சீசனிலும் பங்கேற்று இருந்தார்.
இத்தகைய சூழலில், அசல் கோலார் இன்று பரபரப்பு பேட்டி ஒன்றை அளித்து இருக்கிறார். தனது நண்பரை குடியுரிமை அதிகாரிகள் தாக்கியதாக குற்றம் சாட்டியிருக்கிறார் அசல் கோலார். அவர் அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:- என்னுடைய மலேசிய நண்பர் நவீன்ராஜ். இவர் சென்னையில் தற்போது இருக்கிறார். கடந்த 2.5 மாதங்களாக இவர் சென்னையில் உள்ளார். சுற்றுலா விசாவில் வந்து இருக்கிறார். ஒரு மாதம் தங்கியிருந்தார்.
சுற்றுலா விசா காலாவதி ஆகும்போது அதை புதுப்பிக்க (renewal) சென்றுள்ளார். அவரோட நாட்டில் இருந்து ரெனிவல் செய்து இருக்கிறார். எங்களுக்கு இன்னைக்குதான் தெரியும்.. டூரிஸ்ட் விசாவை நீட்டிக்க முடியாது என்று... இவர் விமானம் ஏறி ஊருக்கு போகும் போது விமான நிலையத்தில் இருந்து வெளிய வர சொல்லியிருக்கிறார்கள். கடந்த ஒரு வார காலமாகவே எல்லா அலுவலகத்திற்கும் சென்று கொண்டிருக்கிறார்.
மலேசியா அலுவலகம், பாஸ்போர்ட் ஆபிஸ் என போயிருக்கிறார். கடைசியாக குடியுரிமை அலுவலகம் வந்த போது, எங்கே தங்கியிருக்கிறார் என்று கேட்டார்கள். என் வீட்டில்தான் தங்கியிருக்கிறார் என்று நான் சொன்னேன். அப்போ உங்களுக்கு எப்படி இந்திய நண்பர்கள் என்று கேட்டனர். அப்போது எனது நண்பர், இந்திய நண்பர்கள் இருக்க கூடாதா? என்று கேட்டதற்கு அவரை ரூமிற்கு அழைத்து சென்று துன்புறுத்தியுள்ளனர். இவரை அடித்துள்ளனர். கீழ்த்தரமாக பேசியுள்ளனர்.
யார் யாரெல்லாம் பார்த்தீர்கள் என்று கேட்ட போது எல்லாரையும் தரக்குறைவாக பேசியிருக்கிறார்கள். அதற்கப்புறம் இவரது பையை சோதித்து பார்த்து இருக்கிறார்கள். போனை பிடுங்கி வைத்துக்கொண்டார்க்ள். அசல் சான்றிதழ் அனைத்தையும் வாங்கிவிட்டார்கள். எங்க வீட்டில் தான் இருந்து இருக்கிறாங்க என்று தெரிந்தது அப்பாவுடைய முழு புரூப்பையும் கேட்டு இருக்கிறார்கள். அதன்பிறகுதான் 2 நாளில் தீர்வு காண்பதாக சொல்லியிருக்கிறார்கள்.
என்னுடைய ஷோவுக்காக கேரளா சென்றோம். மாநிலம் விட்டு மாநிலம் செல்வதற்கு எதோ வாங்க வேண்டும் என்று சொன்னார்கள். இவர்கள் வெளிநாட்டுக்காரர்கள். இந்திய விசா வாங்கி வந்து இருக்கிறார்கள். இந்தியா முழுவதும் ஒரே நாடு என்றுதான் நினைத்துக்கொண்டு இருக்கிறோம். எனவே வேறு மாநிலம் செல்வதற்கு என்ன ஆதாரம் தேவை என்று தெரியவில்லை.
அதோடு, இவரிடம் நீங்கள் என்னவெல்லாம் பண்ணியிருக்கீங்க... எதேனும் போதைப்பொருள் வச்சிருந்தீங்களா எனக்கேட்டு ரொம்ப ஃபோர்ஸ் பண்ணியிருக்கிறார்கள். அவரை ஒத்துக்க வைக்க கையாண்ட மாதிரிதான் இது தெரிகிறது. டூரிஸ்ட்களை உள்ளே கூப்டு போய் அடிப்பார்களா?. இவ்வாறு அவர் கூறினார்.
-
அமைச்சர் சேகர்பாபு மகன்கள் நடத்தும் நிறுவனத்தில் ரெய்டு.. தேர்தல் நேரத்தில் இறங்கிய ஐ.டி அதிகாரிகள் -
சிஸ்டமே மாறப்போகுது.. சென்னையின் போக்குவரத்தையே தடம் தெரியாமல் மாற்ற போகும்.. தங்கமான பிளான் -
சென்னையில் கடும் சம்மருக்கு இடையே திடீர் பிங்க் வசந்தம்.. பூத்து குலுங்கும் மலர்கள்! எப்படி நடந்தது? -
ECR 2.0: சென்னையின் ‘மெகா’ முகம் மாறுகிறது! நந்தவனம் முதல் நட்சத்திர ஹோட்டல் வரை.. எல்லாமே மாறுது -
ராட்சத பலூன்கள்.. ஃபிளாஷ் மாப்கள்.. தேர்தலுக்கு சென்னை எப்படி ரெடியாகிறது தெரியுமா? -
தமிழ்நாட்டு உயர்கல்வியில் புதுமைப்பெண் – தமிழ்புதல்வன் திட்டங்கள் நிகழ்த்திய மாற்றங்கள் -
தங்கம் மீண்டும் ரூ.10,000? மக்கள் அனைவருக்கும் உள்ள கேள்வி.. ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் நறுக் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன்












Click it and Unblock the Notifications