SIR எதிரொலி.. தமிழ்நாட்டில் 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம்.. ஆர்.எஸ்.பாரதி கொடுத்த அதிர்ச்சி!
சென்னை: SIR பணிகள் காரணமாக தமிழ்நாட்டில் இருந்து 85 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்படலாம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். தகுதியான வாக்காளர்கள் மீண்டும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணிகளில் ஈடுபடுவோம் என்று கூறிய ஆர்.எஸ்.பாரதி, அரசியல் கட்சிகளுடன் ஆலோசிக்காமல் வாக்குச்சாவடி எண்ணிக்கையை உயர்த்தியது எப்படி என்றும் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
தமிழ்நாட்டில் SIR பணிகள் நாளையுடன் முடிவடையக் கூடிய சூழலில், சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இறந்தவர்கள், நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்கள், இரட்டை வாக்குகள் வைத்திருப்பவர்களின் பெயர்கள் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இதனால் தகுதிவாய்ந்த வாக்காளர்களும் நீக்கப்படலாம் என்ற கருத்தும் நிலவி வருகிறது.

இதனால் தகுதியான வாக்காளர்களின் பெயர்கள் விடுபடாமல் இருக்க திமுகவினர் தொடர்ந்து களத்தில் செயல்பட்டு வருகின்றனர். ஒவ்வொரு நாளும் கூடாரம் அமைத்து SIR விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்து வருகின்றனர். இந்த நிலையில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், SIR மூலமாக 80 முதல் 85 சதவிகித வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதற்கு திமுகவே முழு காரணம்.
திமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் களத்தில் இருந்து கட்சி சார்பின்றி SIR பணிகளில் ஈடுபட்டனர். அது ஓரளவிற்கு நிறைவு பெற்றுள்ளது. டிசம்பர் 19ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. எவ்வளவு பேர் நீக்கப்பட்டுள்ளார்கள் என்பது வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பின் தெரிய வரும். சுமார் 85 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள்.
இது எந்த அளவிற்கு உண்மையென்று புள்ளி விவரங்களோடு வந்தால் தான் தெரியும். டிசம்பர் 19ஆம் தேதிக்கு பின்னர் தான் கவனமாக செயல்பட வேண்டிய பொறுப்பு திமுகவுக்கு உள்ளது. இதனை பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கும் சொல்லி இருக்கிறோம். தமிழ்நாடு முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
இதன்பின் நீக்கப்பட்டவர்கள் யார் யார் என்பதை ஆராய்ந்து அவர்களுக்கான வாக்குகளை உறுதி செய்ய அறிவுறுத்தி இருக்கிறோம். இதனை பற்றியெல்லாம் பேச எடப்பாடி பழனிசாமிக்கு கவலையில்லை. இந்தியாவிலேயே SIR வேண்டும் என்று நீதிமன்றம் சென்ற ஒரே கட்சி அதிமுக தான். அதிமுகவில் இருந்து சிலர் திமுகவுக்கு செல்லலாமா, நடிகர் கட்சிக்கு செல்லலமா என்ற மனநிலையில் இருக்கிறார்கள்.
எதன் அடிப்படையில் வாக்குச்சாவடி உயர்த்தப்பட்டது என்பது தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்படும். அதனை சட்டத்துறை பார்த்துக் கொள்வோம். லோக்சபா தேர்தலின் போது பிரதமர் மோடி 8 முறை வந்தார். அமித்ஷா அடிக்கடி வந்தார்.. எங்களுக்கு முழு தொகுதியும் கிடைத்தது. அதனால் அமித்ஷா மற்றும் ஆளுநர் ஆர்.என்.ரவி இங்கேயே இருக்க வேண்டும். அப்போதுதான் திமுக 202 தொகுதிகளில் வெல்லும் என்று தெரிவித்துள்ளார்.
-
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
2026 தேர்தல் யார் ஜெயிப்பார்கள்? ‘நீயா நானா’வில் ஜோதிடர்கள் உடைத்த ரகசியம்! பெண்கள் ஓட்டு, மறு எலக்சன் இருக்காமே! -
ஸ்டாலின் வீசிய பிரம்மாஸ்திரம்.. கூட்டணி கட்சிகளுக்கு குறைவாக சீட் தந்து சமாளித்தது எப்படி? பின்னணி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
திமுக விட்டுக் கொடுத்துள்ளதால்.. நாங்களும் இறங்கினோம்.. மனம் திறந்த திருமாவளவன் -
0.43% பிரேமலதாவுக்கு 10+1..3% கமலுக்கு 0! இன்னொரு மதிமுக மநீம? நீங்க சினிமாவுக்கே போயிருங்க ஆண்டவரே! -
விருகம்பாக்கம், விருதுநகர்.. தேமுதிக போட்டியிட விரும்பும் 10 தொகுதிகள் எது? பூரிப்புடன் சொன்ன பிரேமலதா -
Election Exclusive: ரேசில் முந்திய எடப்பாடி.. சடன் ப்ரேக் போட்ட அறிவாலயம்! அதிருப்தி பங்காளிகளை சமாளிக்க புது வியூகம்! -
எஸ்டிபிஐ, கருணாஸ்க்கு தலா 1 தொகுதி ஒதுக்கீடு.. உதயசூரியன் சின்னத்திலேயே போட்டி.. எந்த தொகுதி? -
தமிழக தேர்தல் வரலாறு: 1984க்கு பின் 2016ல் சாதித்த ஜெ.! திமுகவினர் மீது 3264 நில அபகரிப்பு வழக்குகள் -
சர்ச்சை பேச்சு விவகாரம்.. முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப நீதிமன்றம் உத்தரவு!












Click it and Unblock the Notifications