1 கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்படுது! தமிழ்நாட்டில் நீக்கப்படும் 97 லட்சம் பேர்? அஸ்திவாரமே காலி
சென்னை: தமிழ்நாடு முழுக்க கிட்டத்தட்ட 1 கோடி பேர் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
வாக்காளர் லிஸ்டில் பெயர் இல்லாதவர்கள் புதிய வாக்காளராக பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. புதிய வாக்காளர்கள், இடம் மாறியோர் மற்றும் சிறப்பு ஆய்வு திருத்தத்தில் (SIR) விடுபட்டோர் இனி பதிவு செய்யலாம்.

பிப்ரவரியில் வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் இடம்பெற புதிய வாக்காளர்கள், இடம் மாறியோர் மற்றும் சிறப்பு ஆய்வு திருத்தத்தில் (SIR) விடுபட்டோர் இப்போது பதிவு செய்யலாம். பெருநகர சென்னை மாநகராட்சி (GCC) 3,700 சாவடி நிலை அலுவலர்கள் வழியாக படிவம்-6 ஐ விநியோகிக்கிறது. மேலும், தேர்தல் ஆணைய இணையதளத்திலும் ஆன்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்படுகின்றன.
புதிய வாக்காளர்கள் பதிவு செய்யலாம்
பெரும்பாலான SIR படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டும், தாமதங்களும் தொழில்நுட்பக் கோளாறுகளும் நீடிப்பதை அதிகாரிகள் ஒப்புக்கொள்கின்றனர். எனவே, ஒரு முழுமையான சீரான ஆன்லைன் செயல்பாட்டிற்கு கோரிக்கைகள் எழுந்துள்ளன.
தமிழ்நாட்டில் 77 லட்சம் வாக்காளர் கொத்தாக நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னையில் மட்டும் 10.40 லட்சம் பேர் வரை நீக்கப்பட வாய்ப்பு உள்ளது.
இறந்தவர்கள், இடம்மாறியவர்கள், தொடர்பு கொள்ள முடியாதவர்கள், இரட்டை வாக்கு கொண்டவர்கள் என்று 77.52 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. 25.42 லட்சம் பேர் இறந்த காரணத்தால் பெயர்கள் நீக்கப்பட உள்ளன. 5.18 கோடி பேர் இதுவரை SIR படிவங்களை பதிவேற்றி உள்ளனர்.
77 லட்சம் பேர் வரை படிவங்களை வழங்கவில்லை. இடம் மாறியவர்கள் 39.27 லட்சம் பேர், 8.97 லட்சம் பேர் தொடர்பு கொள்ள முயடியாதவர்கள் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மற்ற காரணங்களுக்காக 3.32 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்புகள் உள்ளன. இதனால் தேர்தல் முடிவுகளே பல தொகுதிகளில் மாறும் வாய்ப்புகள் உள்ளன.
SIR பணிகள் தமிழ்நாடு
இந்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு சிறப்பு சுருக்கத் திருத்தப் பணி காலக்கெடுவை ஒரு வாரம் நீட்டித்தது. கடந்த நவம்பர் மாதம் 4-ந் தேதி இந்த பணிகள் தொடங்கியது. தமிழ்நாட்டில் கடந்த 2002-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யப்பட்டு வருகின்றன. எஸ்.ஐ.ஆர் பணிகளில் தமிழகத்தில் 68,470 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், அதாவது பிஎல்.ஓக்கள் ஈடுபட்டனர். கடந்த வாரம் முடிய வேண்டிய பணிகள் 1 வாரம் நீட்டிக்கப்பட்டு நேற்று நிறைவு பெற்றது.
கனமழை போன்ற காரணங்களால் கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, தமிழகத்தில் இப்பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்த் துறை ஊழியர்கள் மேலும் ஒரு மாதம் அவகாசம் கோரியுள்ளனர். எனினும், தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக், திட்டமிட்டபடி பணிகளை முடிக்க ஆணையம் முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பதிவேற்றம் செய்யப்பட்ட படிவுகளின் அடிப்படையில் வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு வரும் 19 ஆம் தேதி வெளியிடப்படும். அதன்பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கும், திருத்தங்களை மேற்கொள்ளவும் மேலும் ஒரு மாத கால அளவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும். அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி மாதத்தில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
தமிழ்நாடு நீக்கம்
மொத்தமாக தமிழ்நாடு முழுக்க 3.98 லட்சம் இரட்டை பதிவுகள் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமாக வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 97 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக சென்னையில் 14.26 லட்சம் பேர் நீக்கப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.
செங்கல்பட்டில் 7.00 லட்சம் பேர் நீக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மொத்தமாக 26.90 லட்சம் இறந்தவர்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளனர். 13.60 லட்சம் பேர் கண்டுபிடிக்க முடியாதவர்கள் அல்லது ஆப்செண்ட் ஆனவர்கள் நீக்கப்பட உள்ளனர். தமிழகத்தில் சனிக்கிழமை நிலவரப்படி, 6.41 கோடி வாக்காளர்களில் 6.30 கோடி பேருக்கு (98.34%) கணக்கெடுப்பு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. சுமார் 11 லட்சம் வாக்காளர்களை இன்னும் சென்றடையவில்லை. மொத்த வாக்காளர்களில் 6.29 கோடி படிவங்கள் (99%) டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications