ஆளுநர் ரவி, குஷ்பு குறித்து அவதூறு பேச்சு.. சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் சிறை தண்டனை நிறுத்தம்
சென்னை: திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் பாஜக நிர்வாகி குஷ்பு குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கில், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு விதிக்கப்பட்டிருந்த சிறை தண்டனையை சென்னை அமர்வு நீதிமன்றம் நிறுத்தி வைத்திருக்கிறது.
கடந்த 2023ம் ஆண்டு சென்னை கொடுங்கையூரில், திமுக சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசியிருந்த சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஆளுநர் ஆர்.என்.ரவி குறித்தும் குஷ்பு குறித்தும் அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து கொடுக்கப்பட்ட புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்தது.

சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணையில், கடந்த பிப்.13ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பில், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.20,000 அபராதமும் விதிக்கப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து, சென்னை அமர்வு நீதிமன்றத்தில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல் முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் தண்டனையை நிறுத்தி வைப்பதாக அறிவித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications