Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிவசங்கர் பாபாவின் வலதுக்கரமாக இருந்த சுஷ்மிதா.6 மாதக் கை குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன் ஆஜர்!

Subscribe to Oneindia Tamil

செங்கல்பட்டு: சிவசங்கர் பாபாவுக்கு உடந்தையாக செயல்பட்டதாக பெண்ணை பச்சிளம் குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன்பு சிபிசிஐடி போலீஸார் ஆஜர்படுத்தினர்.

Recommended Video

    சிவசங்கர் பாபாவின் வலதுக்கரமாக இருந்த சுஷ்மிதா.6 மாதக் கை குழந்தையுடன் நள்ளிரவில் நீதிபதி முன் ஆஜர்!

    செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் என்னும் பள்ளியை சிவசங்கர் பாபா நடத்தி வருகிறார். அப்பள்ளியில் படிக்கும் மாணவிகளிடம் அவர் அத்துமீறி பாலியல் சீண்டலில் நடந்ததாக புகார்கள் எழுந்தன.

    இந்த நிலையில் நேற்று முன் தினம் சிவசங்கர் பாபாவை கைது செய்த சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தீவிர விசாரணைக்குப் பின் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு கிளைச்சிறையில் அடைத்தனர்.

    விசாரணை

    விசாரணை

    இந்த நிலையில் சிவசங்கர் பாபாவிடம் மேற்கொண்ட விசாரணைக்குப்பின் சுஷ்மிதா என்ற பெண்ணை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்ற நீதிபதி முன்பு நள்ளிரவில் ஆஜர் படுத்தினர். பின்னர் அப்பெண்ணை வருகின்ற 2 ஆம் தேதிவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    பச்சிளம் குழந்தை

    பச்சிளம் குழந்தை

    சிவசங்கர்பாபாவை கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்து இரண்டு நாட்கள்கூட ஆகாத நிலையில் அவருக்கு உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நிலையில், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட பெண்ணையும் அவரது பச்சிளம் குழந்தையுடன் சி.பி.சி.ஐ.டி போலீசார் கைது நீதிபதி முன்பு ஆஜர் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    மூளைச் சலவை

    மூளைச் சலவை

    சென்னையைச் சேர்ந்த இவர் சிவசங்கர் பாபாவுக்கு வலதுகரமாக செயல்பட்டவர். மாணவிகளை மூளைச்சலவை செய்து சிவசங்கர் பாபாவின் சொகுசு பங்களாவுக்கு அனுப்பி வைப்பதும் சுஷ்மிதாவின் பணியாம். மாணவிகளிடம் பெரிய ஆளாக ஆக்குவதாக மூளைச் சலவை செய்து சிவசங்கரின் பங்களாவுக்கு அழைத்து சென்று ஏராளமான சிறுமிகளின் வாழ்க்கையை நாசப்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    முன்னாள் மாணவி

    முன்னாள் மாணவி

    இந்த சுஷ்மிதா, அந்த பள்ளியின் முன்னாள் மாணவியாவார். பட்டப்படிப்பு முடித்துவிட்டு வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தவர். இவருக்கு பள்ளி வளாகத்திலேயே ஒரு வீடு கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் திருமணம் ஆனவுடன் சுஷ்மிதா கணவருடன் சென்னையில் வசித்து வந்ததாகவும் தெரிகிறது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+