கடவுளுக்கு சேவை செய்ய என்னை விட்டா ஆள் கிடையாது.. 4 ஆண்டு ஆயுசு எக்ஸ்டென்ஷன்ல இருக்கேன்.. சிவசங்கர்
சென்னை: நான் 72 வயதில் இறந்திருக்க வேண்டியவன், ஆனால் கடவுளுக்கு சேவை செய்ய எனக்கு பதில் மாற்று நபர் இல்லாததால் கடவுள் எனக்கு மேலும் 4 ஆண்டுகள் உயிர் வாழ கால நீட்டிப்பு கொடுத்துள்ளார் என பக்தர்களிடம் சிவசங்கர் பாபா அளந்துவிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
சென்னை கேளம்பாக்கம் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா, மாணவிகளிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக எழுந்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வாய் ஜாலம் மூலம் தனது பக்தர்களை எப்படியெல்லாம் சிவசங்கர் பாபா ஏமாற்றியுள்ளார் என்பது குறித்து ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

காதல் பாட்டு
ஆன்மீக சத்சங்கில் காதல் பாட்டு பாட சொல்லியவர் சிவசங்கர் பாபா. அந்த சத்சங்கில் அவர் பேசுகையில் வடிவேல் சொல்றபடி நல்லா பிளான் பண்ணினால் ஒரே நிமிடத்தில் சாமியார் ஆகிவிடமுடியும் என சிரித்து கொண்டே சொல்கிறார். ஒரு படத்தில் காருக்குள் ஹீரோவும் ஹீரோயினும் உட்கார்ந்து பாட்டு பாடுவார்கள்.

ஆரிய உதடுகள்
அது மிகவும் கெட்ட பாட்டு என்று கூறுகிறார். அப்போது பெண் ஒருவர் ஆரிய உதடுகள் உன்னது, திராவிட உதடுகள் என்னது, ஆரியும் திராவிடம் ரெண்டும் கலக்கட்டுமே என பாடுகிறார். இதற்கு சிவசங்கர் செய்கை மூலம் விவரிக்கிறார். சிவசங்கர் தொடர்கையில் நான் உச்சத்தில் இருக்கும் சூரியனாக இருக்கிறேன். ஆசிரமத்தில் சிலையாக இருக்கிறேன்.

ஞானி
இதுவரை நான் மூன்று முறை செத்து பிறந்துள்ளேன். ஒவ்வொரு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நான் இறந்து மீண்டும் பிழைப்பேன். 36ஆவது வயதில் நான் ஞானியானேன், அப்போது இறந்தேன். அதன் பிறகு 48 வயதிலும், 60 வயதிலும் இறந்துள்ளேன். நான் கோயிலில் உள்ள சிலையில் ஐக்கியமாகிவிட்டேன்.

4 ஆண்டுகள் எக்ஸ்டென்ஷன்
எனக்கு 72 வயதிலேயே ஆயுள் முடிந்துவிட்டது. நான் இந்த மாதம் சாக வேண்டியது. ஆனால் கடவுள் பார்த்தாரு, இவனுக்கு எவ்வளவோ வேலை இருக்கிறது. இவனை விட்டால் நமக்கு வேறு ஆள் கிடைக்க மாட்டாங்கன்னு நினைத்து இன்னும் 4 ஆண்டுகள் எனது ஆயுளை கூட்டியுள்ளார். என்னிடம் வரும் சிறுமிகள் தேவதைகள், அவர்களை சந்திரன், சூரியனாக்கி கடவுளாக மாற்றுவேன் என மூளைச் சலவை செய்துள்ளார் இந்த 76 வயது பாபா.












Click it and Unblock the Notifications