எங்கிருந்தோ பறந்து வந்த செருப்பு.. எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரத்தில் ஷாக்
சென்னை: தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பிரசார வேன் மீது செருப்பு வீசப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் அதிமுக மற்றும் திமுக தலைமையில் பல கட்சிகளும் இணைந்து கூட்டணிகளாக களமிறங்கியுள்ளன.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட, அதிமுகவின் பல தலைவர்களும் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேடை அமைத்து, பொதுக்கூட்டங்களில் பேசினால் காலதாமதம் ஏற்படும் என்பதால் திறந்த வேனில் நின்றபடியே முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆங்காங்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதே போல தஞ்சாவூர் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட மன்னார்குடி, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் செய்தார்.
இரவு 9 மணியளவில் ஒரத்தநாட்டில் பிரசாரத்தில் ஈடுபட்டபோது எங்கிருந்தோ பறந்து வந்த ஒரு செருப்பு எடப்பாடியின் வாகனம் மீது விழுந்தது. யாரோ விஷமிகள் இவ்வாறு செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. ஆனால் அது யாரென்று தெரியவில்லை. காவல்துறையினர் அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications