Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆக்ரோஷமாகும் பாம்புகள்.. டிசம்பர் வரை அப்படித்தான் இருக்கும்! மக்களே உஷார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பருவமழை காலம் என்பதால் வெள்ளத்திற்கு அஞ்சி பாம்புகள் வீடுகளுக்குள் நுழையும் அபாயம் இருக்கிறது. மறுபுறம் இது பாம்புகளின் இனப்பெருக்க காலம் என்பதால், பாம்புகள் ஆக்ரோஷமாக இருக்கும் என்றும் எனவே பாம்புகளிடமிருந்து கொஞ்சம் விலகியே இருக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இனப்பெருக்க காலம் என்பது பாம்புகளுக்கு ஒரு வசீகரமான காலகட்டமாகும். ஒரு பெண் பாம்பு வெளியிடும் பெரோமோன் என்ற ரசாயன வாசனை திரவியத்தின் பின்னால் பல ஆண் பாம்புகள் ஊர்ந்து செல்லும். தங்கள் நாக்குகளை அசைத்து, வாசனை தடத்தைப் பின்தொடரும் ஆண் பாம்புகள், இந்தச் செயல்பாட்டில் தூரம் மற்றும் சுற்றுப்புறங்கள் குறித்த உணர்வை இழந்துவிடுகின்றன. அதாவது அது காதல் வயப்பட்டிருப்பதால் அக்கம்பக்கத்தில் என்ன நடக்கிறது என்பது குறித்து அதற்கு எந்த கவலையும் கிடையாது.

snakes December

வலிமையான மற்றும் புத்திசாலித்தனமான ஆண் பாம்புகள் மட்டுமே பெண் பாம்புகளுடன் இனப்பெருக்கம் செய்யும் வாய்ப்பைப் பெறுகின்றன. இந்த போட்டித்தன்மை காரணமாக, இனச்சேர்க்கை தேடல்கள் ஆபத்தான சண்டைகளாக மாறி, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. எனவே, வனத்துறை பொதுமக்கள் டிசம்பர் வரை பாம்புகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

கேரள வனத்துறை தொகுத்த அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் 4,000-க்கும் மேற்பட்ட பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. இது முந்தைய மாதங்களை விட குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும், அப்போது சராசரியாக 1,500-க்கும் குறைவான பாம்புகளே மீட்கப்பட்டன. 2024 ஆம் ஆண்டில், செப்டம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் 42% க்கும் அதிகமான பாம்புகள் மீட்கப்பட்டன. கேரளாவில் செப்டம்பர் 2024 உடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு பாம்புபிடி வீரர்களால் மீட்கப்பட்ட பாம்புகளின் எண்ணிக்கை 36% அதிகரித்துள்ளது.

பொதுவாக அக்டோபர் முதல் டிசம்பர் வரை இனப்பெருக்க காலம் என்றாலும், மழைப்பொழிவு வடிவங்களில் ஏற்படும் மாற்றங்கள் பாம்புகளின் நடத்தையை பாதிக்கக்கூடும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். செப்டம்பர் மாதத்தில் அதிக அளவில் பாம்புகள் மீட்கப்பட்டதற்கான காரணம் இதுதான்.

இது குறித்து உதவி வன பாதுகாவலர் முகமது அன்வர் ஒய் கூறுகையில், "பல ஆண் பாம்புகள் ஒரு பெண் பாம்பை வெல்ல போட்டியிடுவதால், அவை அதிக ஆக்ரோஷமான மனநிலையில் இருக்கும்.

பொதுவாக, பாம்புகள் சண்டையைத் தவிர்க்க விரும்புகின்றன, உணவுக்காகவும் வெயிலில் காய்வதற்காகவும் மட்டுமே புற்றுகளில் இருந்து வெளியே வரும். ஆனால் இனப்பெருக்க காலத்தில், பெரோமோன் வாசனையை உணர்ந்துவிட்டால் எதற்கும் நிற்காது. இரவில் மட்டுமே வெளியே வரும் பாம்புகள் கூட பகல் நேரங்களில் பல இடங்களில் காணப்படலாம். இந்த காலகட்டத்தில் வழக்கத்திற்கு மாறான இடங்களில் பாம்புகளைக் காண நேரிடும் என்பதில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்" என்று எச்சரித்துள்ளார்.

இனப்பெருக்கத்திற்காக ராஜநாகம் போன்ற பாம்புகள் பெண் பாம்புகளைத் தேடி 10 கி.மீ தூரம் வரை பயணிக்க முடியும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர். திருவனந்தபுரம் மிருகக்காட்சி சாலையின் முன்னாள் கால்நடை மருத்துவர் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் இணை இயக்குநர் டாக்டர் ஜேக்கப் அலெக்சாண்டர், அதிகரித்த ஆக்ரோஷம் மற்றும் போட்டித்தன்மை காரணமாக பாம்புகள் ஆபத்தானவை என்றார்.

"பொதுவாக, பாம்புகள் உட்பட விலங்குகள் தங்கள் எல்லையை மிகவும் கவனமாக பாதுகாக்கின்றன. பெண் பாம்பைத் தேடும்போது, டெஸ்டோஸ்டிரோன் அதிகரிப்பதால் பாம்புகள் அதிக அளவில் ஆக்ரோஷத்தை வெளிப்படுத்துகின்றன. வலிமையான ஆண் பாம்புகள் பெண் பாம்புகளுடன் இனப்பெருக்கம் செய்கின்றன, தோல்வியுற்றவை மன அழுத்தத்திற்கு உள்ளாகி, தங்கள் வழியில் வரும் எதையும் தாக்கும்படி தூண்டப்படுகின்றன.

வழக்கமாக, பாம்புகள் தங்கள் அமைதியைக் கைவிட்டு, நீண்ட கால செயல்பாட்டில் ஈடுபட்டு, அதிக தூரம் பயணித்து, ஆக்ரோஷமாக மாறுகின்றன. இந்த பருவத்தில் வெவ்வேறு இனங்களின் பாம்புகளைக் காண அதிக வாய்ப்புகள் இருப்பதற்கான ஒரு காரணம் இதுதான். எனவே மக்கள் உஷாக இருக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+