சென்னையில் தெரிந்த சூரிய கிரகணம்.. அப்பப்பா.. போட்டோவில் பார்க்கவே கண் கூசுகிறதே.. வாட் ஏ பிரைட்
சென்னை: சென்னையில் சூரிய கிரகணம் தெரிய தொடங்கி பிற்பகல் 2.29 மணிக்கு முடிந்துவிட்டது. புகைப்படத்தில் பார்ப்பதற்கே கண்கள் கூசுவது போல் உள்ளது.
Recommended Video
இந்தியாவில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் காலை 10 மணிக்கு தொடங்கியது. இது பகல் 12.10 மணிக்கு உச்சத்தை பெற்றது. பின்னர் பிற்பகல் 2.29 மணிக்கு முடிவடைந்தது.
இந்த கிரகணம் ஆசியா, ஆப்பிரிக்கா, பசிபிக், இந்திய பெருங்கடல், ஐரோப்பாவின் சில பகுதிகள், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பகுதிகளில் மட்டுமே தெரியும். இது இந்த ஆண்டின் முதல் கிரகணம் ஆகும். இதற்கு அடுத்த மற்றும் கடைசி கிரகணம் வரும் டிசம்பர் 14-ஆம் தேதி தெரியவரும்.

கிரகணம்
இந்த நிலையில் வெளிநாடுகளில் சூரிய கிரகணம் காலை 9.15 மணிக்கு தெரிய தொடங்கிய நிலையில் இந்தியாவில் 9.58 மணிக்கு கிரகணம் தொடங்கியது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, வேலூர், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளில் கிரகணம் தெரிய தொடங்கியது. 6 மணி நேரம் நீடித்த கிரகணம் பிற்பகல் 2.29 மணிக்கு முடிவடைந்தது.

ஆய்வாளர்கள்
சென்னையில் சூரிய கிரகணம் தொடங்கியதும் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பார்க்கும் போதே கண்கள் கூசுகின்றன. இங்கு 34 சதவீதம் மட்டுமே தெரியும். இந்த கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக் கூடாது என வானியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அது போல் திருச்சி, கோவை, வேலூர் ஆகிய பகுதிகளிலும் சூரிய கிரகணம் தெரிய தொடங்கியதாக கூறப்படுகிறது.

பிர்லா கோலரங்கம்
இந்தியாவில் தெரியும் கடைசி சூரிய கிரகணம் இது என சொல்லப்படுகிறது. இத்துடன் 2022-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியும். 6 மணி நேரம் நீண்ட கிரகணத்தை பொதுமக்கள் பார்வையிட பிர்லா கோலரங்கம் சிறப்பு ஏற்பாடு செய்ததாக தெரியவில்லை.

தடை
சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமாக இருப்பதால் கூட்டம் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல் எந்த கிரகணமாக இருந்தாலும் அதை பொதுமக்கள் காண்பதற்கு பிர்லா பிளேனடோரியம் ஏற்பாடு செய்யும். இதற்காக நிகழ்வு தொடங்குவதற்கு 4 அல்லது 5 மணி நேரங்களுக்கு முன்பேயே மக்கள் வரிசையில் குவிய தொடங்குவர். ஆனால் தற்போது கொரோனா அச்சத்தால் இந்த நிகழ்வுகளை காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications