சென்னைக்கு வர முன்பதிவு செய்த 867 பேர் .. அவர்களின் நிலை என்ன? ரயில்வே மேலாளர் வெளியிட்ட தகவல்
சென்னை: கோரமண்டல் ரயிலில் சென்னை வருவதற்கு 867 பேர் முன்பதிவு செய்திருந்தனர் . அவர்களின் தகவல்களை சேகரித்து வருகிறோம். காயமின்றி தப்பியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்பட உள்ளனர் என தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் கூறினார்.
ஒடிசா ரயில் விபத்து குறித்து தெற்கு ரயில்வே கோட்ட மேலாளர் கணேஷ் பிரபல தமிழ் ஊடகத்திற்கு இன்று காலை பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலில் சென்னை வருவதற்கு 867 பேர் முன்பதிவு செய்திருந்தனர் என்றார். அவர்களின் தகவல்களை சேகரித்து வருகிறோம்.

காயமின்றி தப்பியவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை அழைத்து வரப்பட உள்ளனர். பயணிகளின் முன்பதிவு விவரங்களை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த ரயில் விபத்து குறித்து ரயில்வே துறை விரிவான விசாரணை நடத்தும். ரயில் தடம்புரண்டது தான் விபத்துக்கு முக்கிய காரணமாக இருக்கும்.
தண்டவாளம் பராமரிப்பு பணியில் கவனம் இல்லாமல் இருந்திருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. ஏனெனில் ஒவ்வொரு டிப்பார்ட்மெண்டிலும் காலியிடங்கள் அதிக அளவில் இருப்பதால், கடுமையான வேலைப்பளு இருக்கிறது. இதனால் கடுமையான மனஉளைச்சலுக்கும் உள்ளாக்கப்படுகிறார்கள்.
அதேபோல் தான் இந்த டிராக் பராமரிப்பு விஷயத்திலும் கொஞ்சம் கவனம் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய கணிப்பாக இருக்கிறது. ஏனெனில் மெக்கானிக்கல் ரீதியாக தவறுகள் இல்லை. அப்படி இருந்திருந்தால் ரயிலை உடனே நிறுத்திவிடுவார்கள். சிக்னல் பிரச்சனையும் கிடையாது அல்லது நாசவேலையும் கிடையாது என்றார்.

இதனிடையே ஒடிசாவில் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு உறவினர்கள் செல்ல இன்று இரவு 7 மணி அளவில் சென்டரலில் இருந்து சிறப்பு ரயில் செல்கிறது. இதேபோல் காயம் இல்லாமல் தப்பிய பயணிகள் ஒடிசாவில் இருந்து சென்னைக்கு வர சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications