Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை கடற்கரையிலிருந்து புறப்பட்டு செல்லும் பல மின்சார ரயில்கள் ரத்து.. முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை கடற்கரை பணிமனையில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் இன்றும் வரும் செப்டம்பர் 20ம் தேதியும் சில இரவு நேர மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரையில் இருந்து இரவு நேரத்தில் அரக்கோணம் செல்லும் ரயில்கள், தாம்பரம் செல்லும் ரயில்கள், கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள மின்சார ரயில் வழித்தடங்களில் பராமரிப்பு பணிகளை அதிக அளவில் மேற்கொண்டு வருவதால், அவ்வப்போது மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. ஞாயிறுகளில் பகலில் தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகின்றன. அதேபோல் தாம்பரம், கும்மிடிப்பூண்டி , அரக்கோணம் வழித்தட மின்சார ரயில்களும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரத்து செய்யப்படுகின்றன.

chenai electric train southern railway

அந்த வகையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரயில் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணி நடைபெறுவதால் சில மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாகவும், பகுதி நேர ரத்து செய்யப்படுவதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

முழுமையாக ரத்து: இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: சென்னை கடற்கரையிலிருந்து இன்று (18-ந்தேதி) மற்றும் 20-ந்தேதி இரவு 8.25, 8.55, 10.20 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையிலிருந்து இன்று (18-ந்தேதி) மற்றும் 20-ந்தேதி இரவு 8.05 மணிக்கு புறப்பட்டு திருவள்ளூர் செல்லும் மின்சார ரெயிலும், இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது.

சென்னை கடற்கரையில் இருந்து நாளை (19-ந்தேதி) மற்றும் 21-ந்தேதி காலை 4.05 மணிக்கு புறப்பட்டு அரக்கோணம் செல்லும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது.

பகுதி நேர ரத்து: சென்னை கடற்கரையிலிருந்து இன்று (18-ந்தேதி) மற்றும் 20-ந்தேதி இரவு 11.05, 11.30, 11.59 ஆகிய நேரங்களில் புறப்பட்டு தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் சென்னை கடற்கரை - எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

சென்னை கடற்கரையிலிருந்து நாளை (19-ந்தேதி) மற்றும் 21-ந்தேதி புறப்பட்டு செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில் சென்னை கடற்கரை- எழும்பூர் இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, எழும்பூரில் இருந்து இயக்கப்படும்.

கூடுவாஞ்சேரியிலிருந்து இன்று (18-ந்தேதி) மற்றும் 20-ந்தேதி இரவு 10.10, 10.40, 11.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில் தாம்பரம்- சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, தாம்பரத்தில் நிறுத்தப்படும்" இவ்வாறு தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+