Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சவுமியா, அன்புமணி போட்ட 2 பிளான்.. பென்னாகரம் 2026-ல் தமிழ்க்குமரனுக்கு காத்திருக்கும் அந்த 1 ஆபத்து

Subscribe to Oneindia Tamil

சென்னை: பென்னாகரம் தொகுதியில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் தற்போது சூடுபிடித்துள்ளது..அன்புமணி ராமதாஸ், சவுமியா அன்புமணி ஆகியோர் நேரடியாக களமிறங்கி பிரச்சாரம் செய்து வருவது அரசியல் வட்டத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.. திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் G. K. M. தமிழ்க் குமரனுக்கு எதிராக பாமக தரப்பு தீவிரமாக செயல்படுகிறது.. வன்னியர் வாக்கு வங்கி முக்கியமாக மாறக்கூடிய இந்த தொகுதியில் கடும் போட்டி உருவாகியுள்ளது.. இதுகுறித்த ஒரு எக்ஸ்ளூசிவ் தகவல் ஒன்று நமக்கு கிடைத்துள்ளது.

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை... நிரந்தர நண்பனும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் 2026 சட்டமன்றத் தேர்தலில் பல்வேறு அரசியல் காட்சிகள் அரங்கேறி வருகின்றன.

Sowmiya Anbumani Anbumani Ramadoss Pennagaram 2026 Tamil Kumaran Tamil Nadu Assembly Election 2026 Tamil Nadu Election 2026 PMK 2026 2026


பென்னாகரம் 2026 தேர்தல்

அதன் ஒரு சாம்பிள் தான் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடும் ஜி.கே.எம்.தமிழ் குமரன். கடந்த 2010 ஆம் ஆண்டு பென்னாகரத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாமக சார்பில் மாம்பழம் சின்னத்தில் போட்டியிட்டு வன்னியர்களிடம் வாக்கு கேட்ட தமிழ்க் குமரன், தற்போது பாமகவை எதிர்த்து திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் கைச்சின்னத்திற்காக ஓட்டு கேட்டு போராடுகிறார்..

ஆனால் தமிழ் குமரனை தோற்கடித்தே தீர வேண்டும் என கங்கணம் கட்டிக்கொண்டு அன்புமணியும் அவரது மனைவி சௌமியாவும் களமிறங்கி உள்ளதால் பென்னாகரம் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் பல்வேறு தொகுதிகள் சிறப்பு கவனம் பெற்றுள்ளன. அப்படி சிறப்பு கவனம் பெற்றுள்ள தொகுதிகளில் ஒன்றுதான் பென்னாகரம்.

வன்னியர்கள் ஓட்டு

ஏனென்றால் தமிழகத்தில் உள்ள ஒட்டுமொத்த வன்னியர்களின் பார்வையும் பென்னாகரம் பக்கம் தான் திரும்பியுள்ளது. ஒருங்கிணைந்த பாமகவின் தலைவராக இருந்த ஜிகே மணியின் மகன் தான் இந்த தமிழ்க்குமரன். இவர் சமீபத்தில் தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இப்போது அவருக்கு பென்னாகரம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் அன்புமணியும், சௌமியாவும் தமிழ்க் குமரனை தோற்கடிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பென்னாகரம் தொகுதியில் முகாமிட்டு பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார்களாம்.

சவுமியா, அன்புமணி ராமதாஸ்

பென்னாகரத்தில் நடைபெற்ற பாமக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அன்புமணி, "என்னையும் அப்பாவையும் திட்டமிட்டு பிரித்தவர் ஜி கே மணி. இப்போது அவர் ஸ்டாலினின் கைக்கூலி. ஜிகே மணியின் மகன் தமிழ் குமரன் உதயநிதியின் கைக்கூலி. ஸ்டாலினுடன் ஜிகே மணியும் சேர்ந்துதான் வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு கிடைக்காமல் தடுத்தனர்.

திமுகவில் சேர்ந்தால் ராமதாஸ் குடும்பத்திற்கு ஜிகே மணி செய்த துரோகம் தெரிந்துவிடும் என்பதால் தமிழ் குமரனை காங்கிரசில் சேர வைத்து பென்னாகரத்தில் வேட்பாளர் ஆகியுள்ளனர். பாமகவிற்கும் வன்னியர் சமூகத்திற்கும் துரோகம் செய்தவர்களை தோற்கடித்து ஆக வேண்டும்" என்றெல்லாம் நரம்பு புடைக்க பேசியுள்ளார்.

இதேபோல் அன்புமணியின் மனைவியும், தர்மபுரி தொகுதி வேட்பாளருமான சௌமியாவும் பென்னாகரம் தொகுதியில் பாமக நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைவரையும் நேரில் சந்தித்து தமிழ் குமரனை தோற்கடிக்க வேண்டுமென வலியுறுத்தி வருகிறாராம்...வன்னியர்கள் என்ன முடிவெடுக்க போகிறார்களோ தெரியவில்லை.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!

- சிறப்பு நிருபர்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+