தொடர்ந்து வெண்டிலேட்டர்.. எக்மோ சிகிச்சை.. எஸ்.பி.பி உடல்நிலை சீராக உள்ளது.. மருத்துவமனை அறிக்கை!
கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை: கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Recommended Video
பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த 5ம் தேதி கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டார். இதையடுத்து சென்னையில் அமைந்தகரையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் எஸ்.பி பாலசுப்பிரமணியம் உடல் அவ்வப்போது முன்னேறி வந்தது. அதே சமயம் திடீர் என்று அவரின் உடல்நிலை நலிவடைந்தது. உடல் நிலை நிமிடத்திற்கு நிமிடம் மாறி வந்தது. இதனால் தொடர்ந்து ஐசியூவில் வைத்து அவர் கண்காணிக்கப்பட்டார்.
நேற்று முதல்நாள் அவரின் உடல் மேலும் நலிவடைந்தது. இதனால் தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு செயற்கை சுவாசம் மற்றும் எக்மோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இன்று காலை எஸ்.பி.பி உடல் கொஞ்சம் முன்னேறிய நிலையில் தற்போது அவரின் உடல் சீராக உள்ளது.
டீயில் பாய்சன்.. 4வது முறையாக கொலை முயற்சி.. ரஷ்யாவில் புடினே பார்த்து நடுங்கும் ஒரு நபர்.. பின்னணி!
அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வெண்டிலேட்டர் அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ சிகிச்சையும் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரின் நுரையீரல் லேசாக செயல்பாடு குறைந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.