Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சிகிச்சையின்போது எப்படி ஆக்டிவா இருந்திருக்காரு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாருங்க.. வெளியான வீடியோ

Subscribe to Oneindia Tamil

சென்னை: பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பால் சென்னை மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.

Recommended Video

    மருத்துவமனையில் பிசியோதெரபி பயிற்சி பெற்று வந்த SPB - வீடியோ

    சுமார் 50 நாட்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டாலும், பிறகு அந்த வைரஸ் பாதிப்பால் உடலில் பிற உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

    கொரோனா நெகட்டிவ்

    கொரோனா நெகட்டிவ்

    எனவேதான் செப்டம்பர் துவக்கத்திலேயே அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துவிட்ட போதிலும் கூட, பிற உறுப்புகள் நன்கு செயல்பட்டு, தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவருக்கு எக்மோ சிகிச்சை, செயற்கை சுவாச சிகிச்சை உள்ளிட்ட பல வகையான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தன.

    பிசியோதெரபி சிகிச்சை

    பிசியோதெரபி சிகிச்சை

    எனவே மருத்துவமனையில் அவர் படுக்கையிலேயே தொடர்ந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்து படுக்கையிலேயே இருப்பதால், அவரது உடல் உறுப்புகளுக்கு.. குறிப்பாக கை கால் போன்ற வெளி உறுப்புகளுக்கு பயிற்சி என்பது மிகவும் அவசியப்படுகிறது. அந்த வகையில் அவருக்கு பிஸியோதெரபி மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிச்சை வழங்கியுள்ளனர்.

    பிசியோதெரபி வீடியோ

    பிசியோதெரபி வீடியோ

    பிசியோதெரபி சிகிச்சையின்போது கை ரிக்ஷாவில் எப்படி பெடல் சுற்றுவார்களோ அதுபோல ஒரு பெடல் போன்ற கருவி எஸ்பி பாலசுப்ரமணியம் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. பாலசுப்பிரமணியம் அதை, நல்லபடியாக சுற்றுகிறார். இதை பார்த்த மருத்துவர்கள், சிறப்பு, மிகச்சிறப்பு, அருமையாக ஒத்துழைப்பு தருகிறீர்கள். நன்றி சார். என்று ஆங்கிலத்தில் தெரிவிக்கிறார்கள். இந்த சிகிச்சை நடைமுறையை பற்றிய வீடியோ காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

    உடல்நிலை முன்னேற்றம்

    உடல்நிலை முன்னேற்றம்

    மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எஸ்பி பாலசுப்ரமணியம், மகன் எஸ்பிபி சரண் தனது தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார். அதுபோல முன்னேற்றம் ஏற்பட்ட காலகட்டத்தில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

    ஆக்டிவாக இருந்த எஸ்பிபி

    ஆக்டிவாக இருந்த எஸ்பிபி

    அனைவரும் செய்த பிரார்த்தனையின் பலன், எஸ்பிபிஐ இந்த அளவுக்கு ஆக்டிவாக மாற்றியிருக்கிறது போலும். ஆனால் என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை. கொடூரமான கொரோனா வைரஸ் உள்ளே இருந்து அவரது உள்ளுறுப்புகளை பாதித்துள்ளது. அதன் பக்கவிளைவாக தான் இன்று பிற்பகலில் மாரடைப்பு ஏற்பட்டு எஸ்பி பாலசுப்பிரமணியம் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று சேர்ந்து விட்டார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+