சிகிச்சையின்போது எப்படி ஆக்டிவா இருந்திருக்காரு எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாருங்க.. வெளியான வீடியோ
சென்னை: பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் கொரோனா பாதிப்பால் சென்னை மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
Recommended Video
சுமார் 50 நாட்களுக்கும் மேலாக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக அவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டாலும், பிறகு அந்த வைரஸ் பாதிப்பால் உடலில் பிற உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா நெகட்டிவ்
எனவேதான் செப்டம்பர் துவக்கத்திலேயே அவருக்கு கொரோனா நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்துவிட்ட போதிலும் கூட, பிற உறுப்புகள் நன்கு செயல்பட்டு, தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக அவர் தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தார். அவருக்கு எக்மோ சிகிச்சை, செயற்கை சுவாச சிகிச்சை உள்ளிட்ட பல வகையான சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வந்தன.

பிசியோதெரபி சிகிச்சை
எனவே மருத்துவமனையில் அவர் படுக்கையிலேயே தொடர்ந்து இருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. இவ்வாறு தொடர்ந்து படுக்கையிலேயே இருப்பதால், அவரது உடல் உறுப்புகளுக்கு.. குறிப்பாக கை கால் போன்ற வெளி உறுப்புகளுக்கு பயிற்சி என்பது மிகவும் அவசியப்படுகிறது. அந்த வகையில் அவருக்கு பிஸியோதெரபி மருத்துவர்கள் பிசியோதெரபி சிகிச்சை வழங்கியுள்ளனர்.

பிசியோதெரபி வீடியோ
பிசியோதெரபி சிகிச்சையின்போது கை ரிக்ஷாவில் எப்படி பெடல் சுற்றுவார்களோ அதுபோல ஒரு பெடல் போன்ற கருவி எஸ்பி பாலசுப்ரமணியம் கையில் கொடுக்கப்பட்டுள்ளது. பாலசுப்பிரமணியம் அதை, நல்லபடியாக சுற்றுகிறார். இதை பார்த்த மருத்துவர்கள், சிறப்பு, மிகச்சிறப்பு, அருமையாக ஒத்துழைப்பு தருகிறீர்கள். நன்றி சார். என்று ஆங்கிலத்தில் தெரிவிக்கிறார்கள். இந்த சிகிச்சை நடைமுறையை பற்றிய வீடியோ காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உடல்நிலை முன்னேற்றம்
மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோது எஸ்பி பாலசுப்ரமணியம், மகன் எஸ்பிபி சரண் தனது தந்தையின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது என்று சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்திருந்தார். அதுபோல முன்னேற்றம் ஏற்பட்ட காலகட்டத்தில்தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டிருக்கும் என்று தெரிகிறது.

ஆக்டிவாக இருந்த எஸ்பிபி
அனைவரும் செய்த பிரார்த்தனையின் பலன், எஸ்பிபிஐ இந்த அளவுக்கு ஆக்டிவாக மாற்றியிருக்கிறது போலும். ஆனால் என்ன கெட்ட நேரமோ தெரியவில்லை. கொடூரமான கொரோனா வைரஸ் உள்ளே இருந்து அவரது உள்ளுறுப்புகளை பாதித்துள்ளது. அதன் பக்கவிளைவாக தான் இன்று பிற்பகலில் மாரடைப்பு ஏற்பட்டு எஸ்பி பாலசுப்பிரமணியம் மண்ணுலகை விட்டு விண்ணுலகம் சென்று சேர்ந்து விட்டார்.
-
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை!












Click it and Unblock the Notifications