பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்.. மருத்துவமனை அறிக்கை
சென்னை: பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை அமைந்தகரை சென்னை எம்ஜிஎம் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி முதல் பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் மருத்துவமனையில் எக்மோ கருவி, மற்ற உயிர் காக்கும் கருவிகளின் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் உடல்நிலை மிகவும் மோசம் அடைந்துள்ளது. எஸ்பிபிக்கு அதிகபட்ச உயிர்காக்கும் கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்படுகிறது. எம்ஜிஎம் மருத்துவமனை மருத்துவர்கள் குழு அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள் என மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

சுவாசப் பிரச்சினை
எஸ்பிபிக்கு லேசான கொரோனா தொற்று இருந்ததை அடுத்து அவர் அமைந்தகரையில் உள்ள எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்ற நிலையில் சுவாசப் பிரச்சினை காரணமாக அவருக்கு செயற்கை சுவாசம் வைக்கப்பட்டது.

மருத்துவமனை நிர்வாகம்
இந்த நிலையில் அவரது உடல் நிலை மோசமடைந்ததாக மருத்துவமனை நிர்வாகம் செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து எஸ்பிபியின் உடல் பூரண நலம் பெற வேண்டிய திரைத்துறையினர், கர்நாடக சங்கீத வித்வான்கள், ரசிகர்கள் என வீட்டில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.

கொரோனா நெகட்டிவ்
இதைத் தொடர்ந்து அவரது உடல் நிலை மெல்ல மெல்ல முன்னேற்றம் அடைந்து வருவதாக அவரது மகன் சரண் தெரிவித்தார். எஸ்பிபி தனது குடும்பத்தினருடன் சைகையில் பேசுவதாகவும் எழுதி காட்டுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் எஸ்பிபிக்கு கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கொரோனா நெகட்டிவ் என வந்துவிட்டதாக அவரது மகன் தெரிவித்திருந்தார். இதனால் ரசிகர்கள், அவரது நலம் விரும்பிகள் என மகிழ்ச்சி அடைந்தனர்.

சுவாச கருவி
தனது ஐபேட் மூலம் கிரிக்கெட், டென்னிஸ் உள்ளிட்ட விளையாட்டுகளை அவர் காண்பதாகவும் ஐபிஎல் போட்டியை அவர் காண ஆர்வத்துடன் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். கொரோனாவிலிருந்து மீண்டாலும் அவருக்கு சுவாச கோளாறு இருப்பதால் செயற்கை சுவாச கருவியை எடுக்க மருத்துவர்கள் மறுத்துவிட்டார்கள்.

அறிக்கை
கடந்த சில நாட்களுக்கு முன்பு எஸ்பிபி தனது திருமண நாளை கொண்டாடியதாகவும் அவரது மகன் சரண் தெரிவித்திருந்தார். நாளுக்கு நாள் உடல்நிலையில் முன்னேற்றம் இருந்து வந்த நிலையில் தற்போது அவரது உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications