10 வயசு சிறுமி.. மிரட்டி மிரட்டியே பாலியல் தொல்லை.. சப் இன்ஸ்பெக்டர் போக்சோவில் கைது
10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டார்.
Recommended Video

சென்னை: யூனிபார்மில் கையில் துப்பாக்கியுடன் விறைப்பாக நிற்கும் இவர்தான் 10 பெண் குழந்தையை நாசம் செய்தவர்.
சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்தவர் வாசு. மாதவரம் பால் பண்ணை போலீஸ் ஸ்டேஷனில் சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.
வில்லிவாக்கம் ஜகநாதபுரம் பகுதியில்தான் குடியிருக்கிறார். இவர், நேற்று முன்தினம் தன் வீட்டு பக்கத்தில் தெருவில் 10 வயது சிறுமி விளையாடி கொண்டிருந்தார்.

அலறிய குழந்தை
உடனே அருகில் சென்று அந்த குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை செய்ய ஆரம்பித்துள்ளார். அந்த குழந்தையோ கத்தி அலறி உள்ளது. இதனால் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் எல்லாம் ஓடிவந்தார்கள். ஆனால் அதற்குள் வாசு எஸ்கேப் ஆகி ஓட தொடங்கினார்.

சரமாரியாக அடித்தனர்
அதற்குள் என்ன நடந்தது என்று பொதுமக்கள் குழந்தையிடம் கேட்ட, அவளும் நடந்ததை கூற, ஆத்திரமும் அதிர்ச்சியும் அடைந்த மக்கள் இன்ஸ்பெக்டரை பின்னாலேயே துரத்தி கொண்டு ஓடினார்கள். பிறகு விரட்டி பிடித்து சரமாரியாக அடிக்க ஆரம்பித்தார்கள். இறுதியாக வில்லிவாக்கம் போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

உயரதிகாரிகள் நடவடிக்கை
இன்ஸ்பெக்டர்மீது புகார் சொல்லி அவரை பிடித்து கொண்டு ஸ்டேஷன் வரவும் போலீசார் புகார் எதுவுமே மக்களிடம் வாங்கவில்லை. வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. உடனே இது சம்பந்தமாக உயர்அதிகாரிகளின் கவனத்துக்கு விஷயம் போனது.

4 மாதமாக தொல்லை
பின்னர் உடனடியாக பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிடப்பட்டது. அப்போது காவல் நிலைய குழந்தைகள் நல அலுவலர் மூலம் விசாரணை நடத்தியதில் இன்னொரு பகீர் வெளிச்சத்துக்கு வந்தது. இந்த இன்ஸ்பெக்டர் சிறுமியை இப்படித்தான் 4 மாசமாக மிரட்டி மிரட்டியே பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என தெரியவந்தது.

போக்சோ பாய்ந்தது
இதையடுத்து இன்ஸ்பெக்டரிமே நேரடி விசாரணை நடந்தது. கடைசியில் எல்லா தப்பையும் இன்ஸ்பெக்டர் ஒப்புக் கொண்டார். இதையடுத்து போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து இன்ஸ்பெக்டரை கைது செய்தனர்.

பணி ஓய்வு
இந்த இன்ஸ்பெக்டருக்கு 57 வயசாகிறது. அடுத்த வருஷம் ரிடையர் ஆக போறார். இந்த லட்சணத்தில் இப்படி ஒரு கேவலத்தை செய்த சம்பவம் எல்லோருக்குமே பெரும் அதிர்ச்சியைதான் ஏற்படுத்தி உள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications