சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு நாளை முதல் இரு தினங்களுக்கு சிறப்பு பேருந்துகள்.. ரெடியா மக்களே
சென்னை: பவுர்ணமி தினத்தையொட்டி சென்னை- திருவண்ணாமலை இடையே சிறப்பு பேருந்துகள் நாளை இயக்கப்படுகின்றன.
மாதந்தோறும் பவுர்ணமி நாட்களில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலை சுற்றி பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். சிவபெருமானே மலை வடிவில் வீற்றிருந்து அருள் புரிவதாக நம்பப்படுகிறது. இதனால் சிவனின் அருளை பெற பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள்.

அது போல் கார்த்திகை தீபத்தின் போது இந்த கோயிலில் விசேஷமாக இருக்கும். அந்த வகையில் இந்த மாதம் ஆகஸ்ட் 1 ஆம் தேதி ஆடி பவுர்ணமி தினமாகும்.
இதையொட்டி பக்தர்கள் கிரிவலம் வந்து அருணாசலேஸ்வரரை வழிபட ஏதுவாக சென்னையிலிரு்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நாளை மாலை 3, 4, 5 மணிக்கு சென்னையிலிருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் புறப்படுகின்றன.
அது போல் அடுத்த நாள் ஆகஸ்ட் 2 ஆம் தேதி அதிகாலை 3, 4, 5 மணிக்கு திருவண்ணாமலையிலிருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. முன்பதிவுக்காக tnstc.in, tnstc app ஆகியவற்றை பயன்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications