ஹைய்யா.. ரொம்ப நாள் ஆசை, பீச்சுக்கு வந்துட்டேன்.. கடலலையில் கால் நனைத்து பூரித்த மாற்று திறனாளி பெண்
மெரினா பீச்சில் மாற்று திறனாளி பெண் விளையாடும் வீடியோ வைரலாகிறது
சென்னை: "நானும் பீச்சுக்கு வந்துட்டேன்.. ரொம்ப நாள் ஆசை எனக்கு இன்று நிறைவேறிவிட்டது" என்று கடலில் கால் நனைத்த மாற்றுத்திறனாளி பெண்ணின் மகிழ்ச்சி வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி கொண்டிருக்கிறது.
உலகம் முழுதும் டிசம்பர், 3ம் தேதி, உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.. வழக்கமாக, மாற்றுத்திறனாளிகள் கடல் அலையில் நனைந்து ரசிக்கும் வகையில், தற்காலிகமாக பிரத்யேக பாதை அமைக்கப்படுவது வழக்கம்...
Recommended Video
ஆனால், இந்த 2 வருடங்களாகவே கொரோனா பரவல் காரணமாக, மாற்றுத்திறனாளிகளுக்கான பாதை எதுவும் அமைக்கப்படவில்லை... அதுவும் இல்லாமல் கடந்த ஆண்டு அளவுக்கு அதிகமான மழையும் பெய்து கொண்டே இருந்தது.. இதனால் பீச்சில் பாதை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டது...

மாற்றுதிறனாளி
இந்நிலையில்தான், மெரினாவில் மாற்றுத்திறனாளிகள் கடற்கரையின் மிக அருகே சென்று, அலைகளில் காலை நனைத்து மகிழும் வகையில் பிரத்தியேக பாதை கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது... இந்த பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள மரப்பலகை பாதையை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என் நேரு, இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

உதயநிதி
இந்த பாதையை ரிப்பன் வெட்டி உதயநிதி திறந்து வைத்தபோதே, அங்கிருந்த மாற்றுத்திறனாளிகளுடன் கடல்பரப்பு வரை சென்று கால் நனைத்து மகிழ்ந்தார்.. உடனே பீச்சில் வைக்கப்பட்டிருக்கும் சக்கர நாற்காலிகளை பயன்படுத்தி, மாற்றுத்திறனாளிகளும் கடலலையில் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர்... ஜனவரி 16ம் தேதி வரை, தற்காலிக நடைபாதையை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்போது இதனை மாற்று திறனாளிகள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

சக்கர நாற்காலி
பீச்சுக்கு வரும் எத்தனையோ பேர், அலையில் காலார நடந்தும், தண்ணீரில் விளையாடியும் வந்தபோது, இதையெல்லாம் தூரத்தில் இருந்தே மாற்று திறனாளிகள் ஏக்கத்துடன் பார்த்து வந்தனர்.. ஆனால் இப்போது அப்படி இல்லை, கடலில் கால் நனைத்து மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கின்றனர்.. சக்கர நாற்காலியில் உட்கார்ந்து ஆசை தீரும்வரை மகிழ்ந்து வருகின்றனர்..

வைரல் வீடியோ
அந்த வகையில், ஒரு வீடியோவும் வெளியாகி வைரலாகி வருகிறது.. மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் கடலை பார்த்த ஆனந்தத்தில், "நானும் பீச்சுக்கு வந்துவிட்டேன்.. என் நீண்ட நாள் ஆசை நிறைவேறி விட்டது" என்று சொல்லி சொல்லி மகிழ்கிறார்.. கைகளை தட்டி தட்டி உற்சாகத்தில் பூரித்து போகிறார்.. இந்த வீடியோவை பார்க்கும், பொதுமக்களும் இனம் புரியாத ஆனந்தம் ஏற்பட்டு வருகிறது.. கடலலையில் கால் நனைத்து, பலநாள் ஆசையை, ஆசை தீர தீர்த்து தீர்த்து வருகின்றனர் மாற்று திறனாளிகள்..!
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications